ரட்சிக்கப்பட்டவள்.....

2011-09-14

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



ராமாயீ கலப்பையும் மண்வெட்டியும் வெளியே எடுத்து வைக்கும் போதே, அம்பிகா கேட்டாள்

" என்ன ஆச்சி, காட்டு வேலையா. யார் காட்டுல..." 
 
ராமாயீ ஒரு சிரிப்புடன் "ஏங்காட்டுக்கா போகப் போறேன்...எல்லாம் அந்த தங்கவேல் தலைவர் காட்டுக்குத்தான்.." என்று வீட்டை பூட்டிக்கொண்டே சொன்னாள்.

ராமாயீ எந்த ஒரு பதிலுக்கும் ஒரு சிரிப்புடன்தான் பதில் சொல்வாள். அதுவும் மனசில இத்தனை கவலையை வச்சிக்கிட்டு...தங்கவேல் தலைவர் கூட சொல்லுவார்" எப்படி ராமாயீ.. இவ்வளவு பிரச்சினைக்கு மத்தியிலும் எப்பொழுதும் சிரிப்பா இருக்க.." என்பார்.

இவளுக்கு பதில் சொல்ல தெரியாது. இருந்தாலும் எதோ சொல்லி சமாளிப்பாள்..தான் புருசன் ராஜவேல் சாகும் போது நீ எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருக்கனும்னு சொன்னதாக அம்பிகாட்ட மட்டும் சொன்னாள். அதுவும் சிரிச்சிக்கிட்டுத்தான்.. ஆச்சி எப்படித்தான் எல்லா விசயத்தையும் ரொம்ப சுலபமாக எடுத்துக்கொள்ளுகிறாளோ என்று ஆச்சர்யப்படுவாள் அம்பிகா.. நம்மளும் இருக்கிறமோ.. என்று கவலைப்படுவாள். தான் புருசன் இறந்துப்போனதிலுருந்து தனக்கு ஆச்சிதான் எல்லாம் என்று நினைத்துக் கொள்வாள்..
யாரும் இல்லாத தனக்கும் தன் பையனுக்கும் ஆச்சி மட்டுமே துணை என்று சொல்லிக்கொள்வாள்.. யாரும் இல்லாத ராமாயீக்கும் அவள் மட்டுமே துணை.. ராமாயீக்கு இன்னொரு துணை இருந்தது. அதுதான் அவளுடைய ஆடு.. அரசன்னு பேரு வச்சு அழகாய் வள்ர்த்து வந்தாள்.அம்பிகா வீடும் ராமாயீ வீடும் பக்கம் பக்கம்தான்..

வீட்டு பூட்டை பூட்ட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் முடியவில்லை.. அம்பிகாவும் முயற்சி பண்ணிப் பார்த்தாள்.
முடியவில்லை.
"இழவெடுத்த பூட்டு, இன்னைக்கு ஏன் மக்கர் பண்ணுதுன்னு தெரியலயே..." என்று நொந்துக் கொண்டாள்.
" சரி.. நீ போ.. நான் வீட்டை பார்த்துக்கிறேன்..." என்று ராமாயீயை அனுப்பி வைத்தாள்.
" சரி சரி.. பார்த்துக்கோ... பேரன் தூங்கிட்டானா..." என்று கேள்வியைக் கேட்டு விட்டு பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தாள்.
தோளில் மண்வெட்டியும், ஒரு கையில் கலப்பையும் இன்னொரு கையில் சாப்பாடு சட்டியுமாக நடந்துப் போனாள்.
அம்பிகா ராமாயீ போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராமாயீ ஒரு நாள் கூட வீட்டில் இருந்ததே கிடையாது. எதாவது ஒரு வேலைக்கு சென்று விடுவாள்.
நூறு நாள் வேலை பஞ்சாயித்துல போட்டாங்கன்னா முதல் ஆளு ராமாயீ தான் கிளம்புவாள். மற்றபடி தினமும் களை வெட்டுவத்ற்கு எதாவது ஒரு வீட்டில் இருந்து அழைப்பு வந்து விடும். சில நேரங்களில் பக்கத்து ஊருக்கும் களை வெட்டுவதற்கும் செல்வாள். மேலும் ஊரில் உள்ள கரண்ட் ஆபிஸ், பஞ்சாயத்து ஆபிஸ், பேங்க், போஸ்ட் ஆபிஸ் எல்லாத்துக்கும் ராமாயீதான் கூட்டி பெருக்குவாள்... யாரும் விஷேச வீட்டுக்கு கூப்பிட்டாங்கனா, போய் பாத்திரம் தேய்த்து காசு வாங்கிட்டு வருவாள்.. ஒரு வாய் கூட எதிர்த்து பேச மாட்டாள். அதனாலயே எல்லாரும் ராமாயீயதான் எதுக்குனாலும் கூப்பிடுவார்கள்..
தினமும் சமைக்க முடிந்தால் சமைப்பாள்.. இல்லன்னா அம்பிகா வீட்டில் கை நனைத்து விடுவாள்.. அம்பிகா வீடு மட்டுமல்ல எல்லார் வீட்டுக்கும் போக அவளுக்கு உரிமை இருந்தது.. உரிமையோடு போய் சாப்பாடுவாள். எல்லாரும் அவளுக்காக வருத்தம்தான் படுவார்கள்.

ஒரு சின்ன கவலை மட்டும் ராமாயீக்கு இருந்தது. அது ஒடிப்போன தன் மகன் ராஜேந்திரன பற்றித்தான்.
அவனுக்காகவே இவ்வளவும் உழைத்தாள்.. ஒரு நாள் தன் பையன் திரும்பி வருவான்..அவன் நம்மள வச்சு காப்பாற்றா விட்டாளும் அவனை நம்ம வச்சு காப்பாற்றுவோம் என்ற நினைப்பிலே உழைத்து வந்தாள்..
தினமும் கோவிலுக்கு சென்று வேண்டுவாள்..செவ்வாய்க்கிழமை தோறும் ஊர்ல உள்ள அந்தோணியார் கோவிலுக்கு போவாள்.. மனமுருகி வேண்டுவாள்.. ஆனால் இதுவரைக்கும் அந்தோணியார் அவள் குரலுக்கு காது குடுத்த மாதிரி தெரியவில்லை..


ஒரு நாள் அம்பிகா கேட்டாள்.

" ஆச்சி... எல்லா பணத்தையும் எங்க போட்டு வச்சிருக்க... பேங்கலயா..? இல்ல போஸ்ட் ஆபிஸ்லயா..?" என்றாள்.

" பேங்கலத்தான் போட்டுருக்கேன்.. என் ராசா இங்க வா.." என்று அம்பிகா மகனை தன் பக்கம் இழுத்து விளையாட ஆரம்பித்துவிட்டாள்.

தன் மகன் ராஜேந்திரன் ஞாபகம் வரும் பொழுதெல்லாம் அம்பிகா மகனை எடுத்து கொஞ்ச ஆரம்பித்துவிடுவாள்..

"கீரை கட, கீரை கட.. இது உனக்கு, இது இந்த ஆச்சிக்கு, இது உங்க அம்மாக்கு, இது நம்ப ராஜேந்திரன் மாமாவுக்கு " என்று அவன் கயை பிடித்து விளையாடிக்கொண்டிருப்பாள். ராஜேந்திரன் மாமான்னு சொல்லும் போது கண்ணுல தண்ணி வந்துரும்..
"நண்டு நண்டு வருது..." என்று கூறிக்கொண்டே அவனுக்கு கீச்சு காட்ட அவன் சிரிப்பான்.. அவனுடன் சேர்ந்து ராமாயீயும் சிரிப்பாள். அந்த சிரிப்பிலயே தனக்கு இப்படி ஒரு பேரன் இல்லையே என்ற குரல் மெதுவாக ஒலிக்கும். தனக்கு இந்த குடுப்பனை கூட வைக்காமல் போய்ட்டானே என்று நொந்துக் கொள்வாள்..

வீட்டில் போய் படுக்கும் போதுதான் கை, கால் எல்லாம் வலிக்கும். வலியில் கண்ணீர் வரும்.. கண்ணீரின் வழியே தன் பையனின் நினைப்பு வரும்..
ராஜவேல் இருக்கும் போது எந்த குறையும் இல்லாமல்தான் இருந்துச்சு.. ராஜவேலுக்கு எந்த காடும் கிடையாது..குத்தகைக்கு எடுத்து பயிர் பண்ணிட்டு வந்தார். ஒரு நாள் காட்டுல பாம்பு கடித்து ராஜவேல் இறந்துப் போக, குடும்ப நிலமை தலை கீழாக மாறியது.

அதன் பின் காட்டு வேலைக்கு போய் ராஜேந்திரனை படிக்க வைத்தாள். அவனும் பாதியிலே படிப்பை நிப்பாட்டி விட்டு வெல்டிங்க் பட்டறைக்கு சென்று விட்டான். இவளுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. நாலைந்து வருசம் அங்கயே வேலை பார்த்தான்.. பின்னர் வேலை கற்றுக்கொண்டு சென்னை போவதற்கு முடிவெடுத்தான். யாரோ சென்னை போனா நல்ல காசு கிடைக்குன்னு சொன்னதற்காக இந்த முடிவு. ராமாயீக்கு இதில் துளி அளவுக்கும் விருப்பம் இல்லை. எதோ பையனுக்காக ஒத்துக்கொண்டாள்.

சென்னை போனான். நல்லா வேலை பார்த்தான். மாசம் மாசம் ராமாயீயை பார்க்க வந்திருவான். ஊர்ல " உன் பையனை டவுனல பார்த்தேனே.." என்று சொல்லும் போது ராமாயீக்கு சந்தோசமாயிருக்கும்.
தீடிரென்று இரண்டு மாசம் ராஜேந்திரன் ஊர் பக்கம் வரவில்லை.. ராமாயீ எதிர்பார்த்து எதிர்பார்த்து எமாந்துப் போனாள்..

அங் நாட்களில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தாள். வேலை செய்யிற இடத்திற்கு போன் பண்ணி கேட்டதற்கு ஊருக்கு போறாதாக சொல்லிட்டுப் போனார் என்று சொல்லிவிட்டனர். அது வேற இவள் மனதை மிகவும் பாதித்தது. அந்த நேரத்தில் எல்லாம் அம்பிகாதான் ராமாயீயை பார்த்துக் கொண்டாள்.
ஆறு மாதம் கழித்து ராஜேந்திரன் ஊர் வந்து சேர்ந்தான். ஆளே மாறி இருந்தான். அழுக்கு சட்டையும் கைலியுமாக இருந்தான்.
பல நாள் வளர்த்த தாடி அவனை பிச்சைக் காரனைப் போல காட்டியது. ராமாயீக்கு தன் மகன் வந்ததில் மிகுந்த சந்தோசம்.
ராஜேந்திரன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.. எங்கேயோ நிலை குத்திப் பார்த்துக் கொண்டிருப்பான். ஊர் முழுவதும் வந்துப் பார்த்துட்டுப் போனது. ஊருக்குள் பைத்தியம் பிடித்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள்.. ராமாயீக்கு அப்படித்தான் தோன்றியது. எதும் பேசினாலும் பேசமாட்டான். சாப்பாடும் ஊட்டி விட வேண்டியாதாகிருந்தது.. ஊரார் தன் பையனை பைத்தியம் என்று சொல்வதை அவள் விரும்பவில்லை.. சின்ன பசங்களெல்லாம் அவனை சேது என்று கிண்டலடித்தனர்...
பக்கத்து ஊர் பள்ளி வாசலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தாள். அங்கு போயிட்டு வந்ததிலிருந்து கொஞ்சம் பரவாயில்லை,.
பேசுவது புரிந்துக் கொள்வான். அடிக்கடி அம்பிகா பையனிடம் விளையாடவும் செய்வான்.
எப்படி புத்தி குழம்பியது என்ற கேள்விக்கு பதிலே சொல்ல மாட்டான். வீட்டிலே அடைந்து கிடப்பான். கொஞ்சம் நாளில் வெளிய போக ஆரம்பித்தான். அந்தோணியார் கோவில், வயக்காடு, அப்பா சமாதி என்று எங்கெங்கோ சுற்றுவான்.. ராமாயீக்கு நிம்மதியாயிருந்தது. ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்தால் மகன் திருந்தி விடுவான் என்று நினைத்தாள். பொண்ணு தேட ஆரம்பித்தாள்.
பக்கத்தில் ஒரு ஊரில் பொண்ணு ஒன்றை பார்க்க ராமாயீ போயிருந்த சமயம் ராஜேந்திரன் வீட்டில் நூறு ருபாய் மட்டும் எடுத்துட்டு
ஒடிவிட்டான். அதன் பின் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
அவன் ஓடிப் போய் சுமார் இரண்டு வருடம் ஆகிறது. இது வரைக்கும் எந்த தகவலும் இல்லை.

காலையில் எழுந்தாள் ராமாயீ.. உடம்பு வலியாயிருந்தது.. தலை சுற்றுவது போலிருந்தது. கீழே விழுந்து விட்டாள்.
சத்தம் கேட்டு அம்பிகா ஒடி வந்தாள். அவளை தூக்கி வேண்டிய பணிவிடைகளை செய்தாள். ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போயிட்டு வந்தாள்.

ப்டுத்த படுக்கையாகிவிட்டாள் ராமாயீ.. வார்த்தைக்கு வார்த்தை ராஜேந்திரா, ராஜேந்திரா என்று உளறிக்கொண்டிருந்தாள்.
அம்பிகாதான் பக்கத்தில் இருந்து கஞ்சி வச்சு கொடுப்பது, சுடுதண்ணீர் கொடுப்பதுமாக இருந்தாள். ஊர் பெரியவர்கள் வந்து பார்த்துட்டுப் போனார்கள்.. ஆளாளுக்கு இரக்கம் தெரிவித்தனர். சில பேர் " தேறாது " என்று வெளிப்படையாக சொல்லிச் சென்றனர்.

ஒரு நிறைந்த பௌர்ணமி நாளில் ராமாயீ காலமானாள்.. அவள் முகம் பௌர்ணமி மாதிரி பளிச்சென்று இருந்தது.
அம்பிகாதான் ஒயாமல் அழுதுக்கொண்டிருந்தாள்.

ஊர் பெரியவர்களெல்லாம் முடிவு பண்ணி ராமாயீன் உடலை பெரும் விமர்சையாக அடக்கம் பண்ணினர்...
அடக்கத்திற்கு மழை வந்திருந்தது. பெரும் மழை.. ராஜேந்திரன் தான் மழையாய் வந்ததாக அம்பிகா நினைத்தாள்.

இப்பொழுது ராமாயீ கல்லறையில் நிரந்தரமாக துங்கிக்கொண்டிருந்தாள். ராஜேந்திரன் வருவான் என்ற நம்பியக்கையில்..!!
மழை மட்டும அடிக்கடி வந்துக் கொண்டிருக்கிறது.. அது ராஜேந்திரனா என்று தெரியவில்லை...!!

இதுவும் ஒரு காதல் கதை..

2011-09-13

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



மழை பெய்து கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே மழை பெய்வதை பார்த்துக்
கொண்டிருந்தான் சிவா. வெளியே வழுவா அடித்த மழையில் உள்ளே சாரல் அடித்து
முகமெல்லாம் சாரல் விழுந்தது. உடம்பெல்லாம் குளிரும் போது மனசும்
குளிர்ச்சி அடைய ஆரம்பிக்கிறது.. மழை பெய்துக்கொண்டே இருக்க கூடாதா என்று
தோணியது.. சிவாவுக்கு மழை மட்டுமல்ல. வெயில் அடித்தாலும் ரசிக்கத்தான்
செய்வான்... இப்படிப்பட்ட நேரத்தில் எல்லாம் சிவாவுக்கு ஊர் ஞாபகம்
வரும். ஊர் ஞாபகம் வந்தா தான் காதலித்த, காதலிக்க நினைத்த பெண்களெல்லாம்
ஞாபகத்திற்கு வருவார்கள்..மழையிலும் வெயிலும் நனைந்து போய் கிடக்கும்
பாளையங்கோட்டை ராமசாமி கோவில் தெருவும், வீட்டுக்கு எதிர்த்தாப்புல
இருக்கும் தெப்பக்குளமும் , அதற்குமேல எப்பொதும் தன் கூடவே இருந்த நன்பண்
ரெய்னீஸ் ஞாபகமும் வரும்..
ரெய்னீஸ்க்கு பேசலாமே என்று மொபைல் போனை எடுத்தான்.. ஒரு மிஸ்டு கால்
இருந்தது. யாரென்று பார்த்தான். புது நம்பரா இருந்தது.. புது நம்பர்
என்றாலே அது பொண்ணா இருக்க கூடாதா என்றுதான்  எல்லா பசங்களும்
நினைக்கிறார்கள்.. சிவாவும் அப்படித்தான் எதிர்ப்பாப்புடன் திருப்பி ஒரு
மிஸ்டு கால் கொடுத்தான்..கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணி பார்த்தான்..
மறுபடியும் ஃபுல் ரிங்க் கொடுத்தான்.. யாரும் எடுக்கவில்லை..மழை விட்டு
விட்டது.. இந்த புது நம்பர் யாரென்று மண்டையை போட்டு
குழப்பியது..மறுபடியும் போன் பண்ணினான்..ரிங்க் போயிக்கொண்டிருந்தது..

"ஹலோ.." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
"உங்க செல்லுல இருந்து கால் வந்தது.. உங்க நேம் என்னங்க..?" என்றான்..
"காலா...!! இந்த நம்பர்ல இருந்தா..உங்க நேம்...?
"என் நேம் இருக்கட்டும்.. நீங்க உங்க பேர சொல்லுங்க..?" என்றான்.
"ஒன் மினுட்ஸ்...இது என் ஃப்ரண்ட் போன்.. உங்க பேரு சொல்லுங்க.. நான்
வந்ததும் போன் பண்ண்ச் சொல்றேன்.." என்றாள்.
"அது உங்க ஃப்ரண்டு கால் பண்ணும் போது நான் என் பெயரை சொல்லிக்கிடுறேன்..."என்றான்.
அவளும் " ஒகே " என்று போனை வைத்து விட்டாள்..

யாராயிருக்கும் என சிவா யோசிக்க ஆரம்பித்தான்..வாய்சை வைத்து ஒன்னும்
கண்டுபிடிக்க முடியவில்லை.. மறுபடியும் கால் பண்ணலாம்னா அதற்கு
பயமாயிருந்தது.. ஃப்ரண்ட்ஸ் இதற்கு முன்னாடி இப்படிதான் பொண்ணுங்க குரல்ல
ஒட்டிட்டாங்க..


ரெயினீஸ்க்கு போன் பண்ணினான்..போனை எடுத்ததும்
" என்ன டா.. சாப்ட்வேர் இஞ்சினியர்..எப்படிடா இருக்க...என்ன ஒரு போன் கூட
காணொம்.." என்றான் ரெயினீஸ்..
"நல்லா இருக்கேன் டா.. ட்ரெயினிங்க்ல இருக்கேன் அதான்.. பேச முடியல..
அப்புறம் எனக்கு ஒரு மிஸ்டு கால் வந்திச்சு.. போன் பண்ணினா பொண்ணு
பேசுது..நீ ஒன்னும் விளையாடுலயே...?"
"டேய்.. டேய்.. அதுலாம் அப்ப விளையாடுனோம்.. அதுக்குன்னு இப்பவுமாடா..
நான்லாம் இல்லப்பா...மறுபடியும் கால் பண்ணி பார்க்க  வேண்டியதுதானே.."
"அதுவே பண்ணுவேன்னு சொன்னது.. அதான் வெயிட்டிங்க்..."
அதுக்குள்ளே அந்த பழய நம்பர்ல இருந்து கால் வர,
"டேய்.. கட்.. பண்ணு.. அந்த நம்பர்ல இருந்து கால் வருது...பேசிட்டு
பேசுறன்.." என்று ரெயினீஸ் காலை கட் பண்ணிட்டு அந்த கால அட்டெண்ட்
பண்ணினான்.

"ஹலோ..!!" என்றான் மெதுவாக.

" ஹலோ சிவா வா...?" என்றாள் அந்தப் பெண்.. குரல் கேட்க அழகாயிருந்தது.

"ஆமாம்.. நீங்க...?"

"நான்ன்ன்ன்.....!! கண்டுபிடிங்க பார்ப்போம்..." என்றாள் அழகிய
சிரிப்புடன்.. சிரிப்பிலயே சொக்கிப் போனான்.

"என்னால கண்டுபிடிக்கலாம் முடியாதுங்க.. அந்த அள்வுக்கு நமக்கு கேர்ள்
ஃப்ரண்ட்ஸ் இல்லைங்க.." என்றான்.

"ஒகே.. ஒரு க்ளு.. நீதான் என்ன சிரிக்க வச்ச..! நீதான் என்னை அழவும்
வச்ச.. இப்ப..!!"  என்றாள் மறுபடியும் அந்த அழகிய சிரிப்புடன்.

சிவாவுக்கு அது சோபியாவா இருக்குமோ என்று சந்தேகமாயிருந்தது. இத்தனை நாள்
கழித்து எப்படி....!

"சோபி..?" என்றான்.

" சோபிக்கு அப்புறம் கொஸ்டின் மார்க்கா..? என்றாள்.

"இல்ல..  சோபிதான்..." என்றான்... குரல் கொஞ்சம் இறங்கியிருந்தது.

சிறிது நேரம் மௌனம்..

" ஆமாம் சிவா.. நான் சோபிதான் பேசுறேன்... எப்படிடா இருக்க..."

"ம்ம்.. எப்படியோ இருக்கேன்... நீ..?"

"நானும் எதோ  இருக்கேன்... எப்படிடா.. இவ இவ்வளவு நாள் இல்லாமல் இப்ப
பேசுறான்னு பார்க்றியா.. நாம பிரிந்து ஒரு நாலு வருசம் இருக்குமா சிவா...
இப்ப எங்க இருக்க.. என்ன பண்றடா..."

சிவாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.. அவதானா இல்ல யாரும் அவ பேரை
சொல்லி கலாய்க்கிறாங்களா என்று சந்தேகமாயிருந்தது. இருந்தாலும் பேச
ஆசைப்பட்டான்.

" நான் அப்படிலாம் நினைக்கல....நான் இப்ப சென்னைல இருக்கேன்.. இங்க
எனக்கு வேலை கிடைச்சிடுச்சு.. நீ என்ன பண்ற.."

"சென்னையா..? எங்க இருக்க...!"

"வேளச்சேரி... "

"சிவா  நம்ம மீட் பண்ணலாமா.. உன்ன பார்க்கனும் போல இருக்கு... எப்ப மீட்
பண்ணலாம்.."

"மீட் பண்ணலாம்..எங்க் வச்சு.."

"பெசன்ட் நகர் பீச்சுக்கு வரியா..நாளைக்கு மீட் பண்ணலாம்.."

"கண்டிப்பா வாரேன்...அப்புறம்.. என்ன பண்ற.."

"அதுலாம் நாளைக்கு விலாவரியா பேசலாம்..நாளைக்கு ஈவ்னிங்க் வந்துரு.."

"ஒகே வந்துருதேன்..."

"ஒகே பை.."

"பை.."  என்று அவள் போன் வைக்கற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு போனை வைத்தான்..


சிவாவுக்கு தலை சுத்துற மாதிரி இருந்தது. சோபிய எப்படி நம்ம மறந்தோம்
என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டான்.

வெளிய மறுபடியும் மழை பெய்ய ஆரம்பிச்சது.. ஜில்லுனு ஒரு காதல் பூமிகா
மாதிரி சோபி ரீ எண்ட்ரி கொடுக்கிறாளோன்னு தோணியது. ஜோதிகா மாதிரி நமக்கு
ஆள் இல்லன்னு தெரிஞ்சதும்  சந்தோசமாயிருந்தது.

இதே மாதிரி மழை பெய்ந்த நாளன்றுதான் சோபியை முதன்முதலா பார்த்தான். சிவா
வீட்டு மாடியில சுமதி அக்கா வாடகைக்கு இருந்தாங்க. அவங்க வீட்டுக்கு
அடிக்கடி அவங்க ஃப்ரண்டு ஜான்ஸி அடிக்கடி வருவாங்க..

சுமதி அக்கா நல்ல ஜாலி டைப். எதுக்கும் கவலப் படமாட்டாங்க.. அவங்க
வீட்டுக்காரர் வெளி நாட்டுல வேலை பார்த்தார்.
சுமதி அக்காட்ட பேசும் போது கிண்டலும் கேலியுமாத்தான் பேசுவார்கள்
சிவாவும் ரெய்னீஸும்.. அவங்க ஃப்ரண்ட் ஜான்ஸி அக்கா கிட்டயும் இதே
ஜாலியாத்தான் சிவா பேசுவான்.

ஒரு நாள் மழை பெய்துக்கொண்டிருக்கும் போது சிவாவும் ரெய்னீஸும் வீட்டு
வாசலில் உட்கார்ந்திருந்தனர்.. அப்பொழுதுதான் ஜான்ஸி அக்கா கூட சோபி
வந்தாள்.. ஜான்ஸி அக்கா எப்பொழுதும் ஸ்கூட்டிலத்தான் வருவாங்க.
மழையில் வந்ததனால ரெண்டு பேரும் நல்லா நனைந்திருந்தார்கள்..
" என்னக்கா.. நல்லா நனைஞ்சிட்டிங்க போலிருக்கு..." என்றான் சிவா நக்கலாக..

" என்னடா.. நக்கலா.. வந்தன்னா.." என்று சிரிச்சிக்கிட்டே மாடிக்கு
சென்றனர். சோபி வெள்ளை கல்ர் சுடிதாரில் இருந்தாள்.
சிவாவும் ரெய்னீஸும் சோபியை வினோதமாக பார்த்தனர். சோபி சிவாவை லைட்டா
பார்த்துட்டுப் போனாள்.

அடுத்த நாளே சுமதி அக்காட்ட மேட்டர் எல்லாம் கறந்துட்டான். ஜான்ஸி
அக்காவுடைய அக்கா பொண்ணூ சோபி. ஊர் சென்னையாம். ப்ளஸ் டூல ஃபெயில்
ஆகிட்டாள். அதனால சோபி அம்மா ஜான்ஸி வீட்ல கொண்டு விட்டுட்டு
போயிட்டாங்க.. ஜான்ஸி வேலைக்கு போனதும் சோபிக்கு வீட்ல போர்
அடிக்குதுன்னு சுமதி வீட்ல கொண்டு விட்டுட்டு போயிட்டாங்க..

இருவரும் அப்பப்ப பார்த்துக்கொள்வார்கள்.. அடிக்கடி சிவா, ரெய்னீஸ்
மற்றும் அவர்கள் ஃப்ரண்ட்ஸ் எல்லம் அந்த தெருவில் சைக்கிள ஸ்டம்பா வைத்து
ஒன் பிட்ச் கிரிக்கெட் விளையாடுவார்கள். இவங்க விளையாடுற கிறுக்கத்தனமான
ஆட்டத்தை மொட்டை மாடியில் இருந்து சோபி பார்த்து ரசிப்பாள். சிவாவ
பார்த்து மெதுவா சிரிப்பாள். ஆனா இரண்டு பேரும்  பேச மாட்டாங்க. .
சுமதி அக்கா கூட பேசும் போது சோபி பக்கத்தில் நின்று சிவாவை ஒரக்கண்ணால்
பார்த்துக் கொண்டிருப்பாள்..சிவா, சுமதி அக்காவ சீண்டுற மாதிரி சோபியை
சீண்டுவான். அவள் திருப்பி எதும் பேச மாட்டாள். சிரிச்சிகிட்டேத்தான்
இருப்பாள்..

ஒரு நாள் கேஸ் வந்து கீழ இற்க்கி வச்சிட்டு போயிட்டான். அத சொல்ல
மாடிக்கு சுமதி அக்காட்ட சொல்ல சிவா போனான். சோபி மட்டும் தான் வீட்டில்
இருந்தாள். சோபியை மட்டும் பார்த்தும் சிவாவுக்கு ஒரு மாதிரியா இருந்தது.

" அக்கா இல்ல.." என்றான் சிவா.

" இப்பத்தான் கடைக்கு போனாங்க.. உள்ளே வாங்க.." என்றாள்.

"இல்ல.. பரவாயில்ல.. நான் அப்புறமா வாரேன்.. " என்றான் சிரித்தப்படியே.

"அவங்க இருந்தா மட்டும்தான் வருவிங்களா.. நாங்க இருந்தா வரமாட்டிங்களா..?" என்றாள்.

"ச்ச.. ச்ச. அப்படிலாம் இல்ல...இந்தா வந்துட்டேன்,, போதுமா..." என்று
வீட்டுக்குள் வந்தான்.

தனியாக அவளை அவ்வளவு நெருக்கமா பார்த்தது சிவாவுக்கு என்னமோ
பண்ணியது..சோபி ரொம்ப கலராயிருந்தாள். அவள் கலருக்கு அந்த லிப்ஸ்டிக்
அடிக்காத உதடு எடுப்பாயிருந்தது. சிவாவுக்கு பார்வை எங்கெங்கோ போனது..
எவ்வளவு தடுத்தும் பார்வை அவளை விட்டு செல்ல மறுத்தது.. அவள் அதை
அவனையறியாமல் ரசித்தாள்.

சேர் எடுத்து போட்டு உட்காரச் சொன்னாள். தானும் பக்கத்தில் சேர் போட்டு
உட்கார்ந்தாள்.

"அப்புறம் நீங்க என்ன பண்றீங்க.. அக்காட்ட கேட்டா சொல்ல மாட்டுக்குகாங்க.."

"நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறேன்... நீ எப்ப உங்க சித்தி வீட்டுக்கு போவ.."

"ஏன்... நான் போனுமா..?"

"இல்ல.. இல்ல.. போயிருயியோன்னு கேட்டேன்.."

"சப்ளிமண்ட்ரி எக்ஸாம் எழுதுற வரைக்கும் இங்க இருப்பேன்.. அப்புறம் அங்க
போயிருவேன்..எனக்கு கவலையாயிருக்கு.."

"எப்ப எக்ஸாம்..?"

" இன்னும் டூ வீக்ஸ் இருக்கு..."

"எந்த பேப்பர்லாம் அவுட்டு..."

"மேக்ஸ், பிசிக்ஸ்...!"

"படிக்கிறியா...?"

"எங்க படிக்க.."

"நான் வேணா சொல்லி தரட்டா..." என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை
பார்த்தான். அவள் வெட்கப்பட்டு

" இப்ப இருந்து, சொல்லித்தரியா.."

"என்ன மரியாதை தேயுது... அக்காட்ட கேட்டுட்டு சொல்லித் தாரேன்.. நீ ஏன்
ஃபெயில் ஆன.. நல்லா படிக்க மாட்டியா..."

" எனக்கு இது மேல விருப்பமே இல்ல.. எனக்கு மாடலிங்க் ஆர் மேக்கப் கேர்ளா
ஆகனும்.. அதான் என் அம்பிஷன்.."

"மேக்கப்லாம் போடுவியா.. எனக்கு எதாவது சொல்லிக்கொடு...உன் புண்ணியத்தில
நானும் அழகாகுறேன்..."

"ஏன் இருக்கிற அழகு போதாதா..? சிவா நீ யாரையாவது லவ் பண்றியா...?

" நெவர்..நம்மள் யார் லவ் பண்ணப்போறாங்க.... நீ..."

"இது வரைக்கும் இல்ல... இனிமேல் பண்ணலாம்னு இருக்கேன்.."

"யாரை.."

"யாரையோ...?" என்று சொல்லி முடிப்பதற்குள் சுமதி அக்கா வந்துவிட்டார்கள்.
இருவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

" என்னடா.. இங்க என்ன பண்ற...சென்னை பொண்ணை கரெக்ட் பண்ண
பார்க்கிறியா..." என்று சொல்லிக்கொண்டே சுமதி அக்கா வீட்டுக்குள்
வந்தார்கள்..

"உங்க சென்னை பொண்ண கரெக்ட் பண்ணிட்டாளும்.. நான் கேஸ் வந்திருக்குன்னு
சொல்ல வந்தேன்.. நான் வாரேன் " என்று சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

அடுத்த நாள் முதல் டெய்லி அவளுக்கு மேக்ஸ் சொல்லிக் கொடுக்க
ஆரம்பித்தான்.. சொல்லிக்கொடுக்கும் போதே பேனாவால அவள் கண்ணத்தை
வருடுவான். அவள் பதிலுக்கு இவன் தொடையில கிள்ளுவாள்..சுமதி அக்கா
தெரிந்தாலும் கண்டுகிட மாட்டாங்க..

ஒரு நாள் அக்கா தற்செயலாக கீழ போயிட்டாங்க..இதுதான் சாக்குன்னு ரெண்டு
பேரும் அடித்து விளையாண்டனர்.

தீடிரென்று சிவா அவள் உதட்டை கையால் பிடித்தான்..அவள் " விடு, விடு"
என்று கை கால உதற அப்படின்னா

"இங்க முத்தம் கொடு" என்று தன் கண்ணத்தை காட்டினான்..அவள் கண்ணத்தில்
கொடுத்தாள். அப்புறம் கையை தட்டி விட்டு ஒட பார்த்தாள். இவன் அவளை
வலுக்கட்டாயமா பிடித்து அவள் உதடு பக்கம் தன் உதடை கொண்டு சென்றான்.
பக்கத்தில் சென்று விட்டு விலகிவிட்டான்..இவன் விலகுவதை பார்த்து அவள்
இவனை பிடித்து இவன் உதட்டில் அவள் உதட்டை பதித்தாள்.

சுமதி அக்கா வரவும் இருவரும் சகஜமாயினர்.

எக்ஸாம் முடிந்து அவள் ஜான்ஸி வீட்டுக்கு சென்று விட்டாள். அவள் இல்லாமல்
சிவா ரொம்ப கஷ்டப்பட்டான். அவள் அங்கிருந்து
இவன் நம்பருக்கு அடிக்கடி கால் பண்ணுவாள். சில நேரம் ஜான்ஸி நம்பர்ல
இருந்தும் கால் பண்ணுவாள்.

ஒரு நாள் ஜான்ஸி வீட்டில் இருந்து கால் வந்திருந்தது. ஜான்ஸிதான்
பேசிருந்தாள். ஜான்ஸி வீட்டில் கம்ப்யூட்டர் ஒன்னு ரிப்பர் பார்க்க
கூப்பிட்டிருந்தாள்.

சிவா ஜன்ஸி வீட்டுக்கு போனான். வீட்டுக்குள் சோபியைத் தேடினான்.. ஜான்ஸி
அவனை தனியாக் உட்கார வைத்தாள். இவனுக்கு எதோ வித்தியாசம் தெரிந்தது.

ஜான்ஸிதான் ஆரம்பித்தாள்.

"சிவா நீ நல்ல பையன்னு எனக்கு தெரியும்... சோபியை நீ லவ் பண்றியா..?"

"ஆமாக்கா.." என்றான் பயத்துடன்.

"அவா.. அங்க  எத்தன மாசம் இருந்திருப்பா.."

"இரண்டு மாசம் இருக்கும்.."

"இரண்டு மாசத்தில லவ்வா...?"

"....!!"

"சொல்லுப்பா.. ரெண்டு மாசத்தில அவள உன்னால புரிஞ்சிக்கிட முடியுமா.."

"புரிஞ்சிக்கிட்டேன்.."

"புரிஞ்சிக்கிட்டியா..? அடப் பாவமே.. அவா சென்னைல எப்படி இருந்தான்னு
உனக்கு தெரியுமா இல்ல அவள் முழு கேரக்டர்தான் உனக்கு தெரியுமா...?

"...."

"நீ காலேஜ் படிச்சிக்கிட்டு இருக்க.. படிச்சி முடித்து நல்ல வேலைக்கு
போக வேண்டாமா...அத விட்டுட்டு அவ பின்னாடி அலைஞ்சிட்டு இருக்க.. உனக்கு
வெக்கமாயில்லை..."  குரல் கொஞ்சம் உயர்ந்திருந்தது.

"அப்ப்டிலாம் இல்லக்கா.."

"என்ன நொன்னக்கா.... அவளையும் அடித்து திட்டி வச்சிருக்கேன்... நீயும்
இனிமேல் அவள் பின்னாடி வராத.. போன் கீன் பண்ணின. அப்புறம்
பார்த்துக்க...உன் குடும்பம் சின்னா பின்னாமாயிரும்... எதோ தெரிந்தவன்னால
உடுறேன.. சுமதிக்காக உன்னை எதுவும் பண்ணல.. பார்த்துப் போ.." என்று
கழுத்தை பிடித்து வெளிய தள்ளாத குறையா அனுப்பி வைத்தாள்.

வெளியே கேட்டை  திற்ந்துட்டு வெளிய வந்தான்.. கண்ணெல்லாம்
கலங்கியிருந்தது. திரும்பி பார்த்தான். மாடியில் ஜன்னலில் இரண்டு கண்
மட்டும் தெரிந்தது. க்ண்னில் கண்ணீர் படிந்திருந்தது...

சுமதி அக்கா தான் சொன்னார்கள். "அவா பாஸ் ஆயிட்டா... சென்னைக்கு போயிட்டா
டா. கடைசியா எனக்கு போன் பண்ணினாடா..
அவ உன்னை எமாற்றிட்டாளாம்... ரொம்ப அழுதாடா...கேட்க கஸ்டமாயிருந்தது.." என்றாள்..

பழசையெல்லாம்  நினைத்துப் பார்க்கும் போது சந்தோசமாத்தான் இருக்கும்.
நாளைக்கு அவளை பார்க்கப் போகிற சந்தோசத்தில் துங்கிப் போனான்.


அடுத்த நாள் பெசண்ட் நகர் பீச்க்க்கு போய் நின்றான்.. அவள் வந்தாள்.. ஆளே
மாறியிருந்தாள். கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாள்.
இருவரும் சிரிச்சப் படியே தங்களுக்குள் வரவேற்றுக் கொண்டனர்.

மணலில் உட்கார்ந்தனர். இருவரும் கொஞ்சம் நேரம் ஒன்னும் பேசவில்லை..

" நம்ம அந்த வயசுல பண்ணுனத பார்த்தா.. காமெடியா தோணுதுலா.." என்றாள்.
அவனைப் பார்த்தப்படியே

"தெரியல... ஒரு அஃப்பக்ஸன்  அவ்வளவுதான்..."

" அது லவ் இல்லயா.."

" அஃப்பக்ஸன் கம் லவ்ன்னு வச்சிக்கலாம்..."

"நாந்தான் உன்னை எமாற்றிட்டேன்...சாரி.." என்றாள்.

" நானும் உன்னை எமாற்றல.. நீயும் என்னை எமாற்றல... இரண்டு பேருமே.. நம்மள
எமாத்திக்கிட்டோம்.."

"யா..யா.. க்ரெக்ட்..அப்புறம் உன் லைப் எப்படி இருக்குது சிவா.. எனக்கு
அப்புறம் நீ எத்தனயோ பொண்ணை பார்த்திருப்ப.. ஒரு நாளாவது என்னை
நினைச்சுப் பார்த்திருப்பியா...?

"முதல்ல கொஞ்ச நாள் நினைச்சேன்... அப்புறம் சகஜமாயிட்டேன்.. அதுக்குன்னு
உன்னை குற்றம் சொல்லல..." என்றான்.

"நீ எனக்கு ஒரு முத்தம் கொடுத்தியே.. அது ஞாபகம் இருக்கா சிவா...?"
என்றாள் கண்ணில் ஆர்வம் பொங்க..

"நான் கொடுக்கல... நீதான் எனக்கு கொடுத்த...அத எப்படி நான் மறக்க முடியும்..."

அவள் சிரிச்சிக்கிட்டே..

"ஆமா.. ஆமா.. நானும் நினைத்துப் பார்ப்பேன்... எல்லாம் காயத்துக்கு
மருந்து போடுற மாதிரி...."

"என் நம்பர் உனக்கு இவ்வளவு நாள் ஞாபகம் வச்சிருந்தியா..."

"என் செல்ல தான் இருக்கும்.. அப்பப்ப பார்ப்பேன்.. போன் பண்ண தைரியம்
வராது...இப்ப தீடிரென்று பண்ணுவொம்னு தோனுச்சு...நான் என்ன
பண்ணுறேன்னு நீ கேட்கவே இல்ல...."

" என்ன பண்ணுற,,,"

"மேக்கப் ஆர்ட்டிஸ்ட்.. சொந்தமா ஃப்யிட்டீ பார்லர் வச்சிருக்கேன்... நான்
என் அம்பிஸன் அடைந்துட்டேன்... ஆனா உன்ன தவிர..
நீ யாரையும் லவ் பண்றியா சிவா.."

"இல்ல... ஏன்..?"

"மறுபடிய்ம் நம்ம லவ் பண்ணுனா நல்லா இருக்குமா..சிவா...?"

"தெரியல..."

"என்ன சிவா தெரியலன்னு சொல்ற... "

'என்ன சொல்றதுன்னு  தெரியல..."

"எனக்கு மறுபடியும் அதே மாதிரி ஒரு முத்தம் தர முடியுமா..."

"மாட்டேன்..!"

"ஏன்.."   கெஞ்சலோடு கேட்டாள்.

"நம்மதான் இன்னும் லவ்வே சொல்லலயே..."

"சொல்லிட்டாப்போச்சு.... ஐ லவ் யூ.. போதுமா...?

"இன்னும் சத்தமா சொல்லு..."

"ஐ லவ் யூ சிவா.." என்று உரக்க கத்தினாள்.

இருவரும் முத்த மழையில் நனைந்தனர்.

அழுக்கான அன்னைகள்..

2011-09-07

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்








ஆண்டு பொதுத்தேர்வு,

வேண்டுதலுக்கு ஆலயத்திற்கு சென்றேன்...!!

உள்ளே  மாசற்ற அன்னை தன் பாலகனை கையில் ஏந்தி நின்றுக்கொண்டிருந்தாள்..

காணிக்கை போட்டு வேண்டினேன்..

வெளியே  மாசுள்ள அன்னைகள் தன் அழுக்குள்ள பாலகன்களை கையில் ஏந்தி வரிசையாக உட்கார்ந்திருந்தனர்..

ஒவ்வொருத்தருக்கும் காணிக்கை போட்டேன்..

மாசற்ற அன்னை கண் கலங்க என்னை ஆசிர்வதிக்கவில்லை...!!

அழுக்கான அன்னைகள் என்னை  கண் கலங்க ஆசிர்வதித்து அனுப்பினர்...!!

நாம் வீரத்தமிழர்களா...?

2011-09-04

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

"வருகிற செப்டம்பர் 9 ல மூணு பேர தூக்குல போட போறாங்க தெரியுமா..?"
"தெரியுமே.."
"தெரியுமா..! உனக்கு கோபம் வரல.."
"எதுக்கு வரனும்..?"
"மனித உயிரை சிதைக்க போறாங்க..இரக்கம் வரலயா.."
"தப்பு பண்ணுனா, தண்டனை கிடைக்கத்தான் செய்யும்.."
"தப்பு பண்ணுனாங்கன்னு தெரியுமா..?"
"அதான் ஊருக்கே தெரியுமே.."
"உனக்கு தெரியுமா.."
"எனக்கு தெரியும் போதுமா..! அதுக்கு வருத்தம் பட்டு நான் என்ன பண்ண.. ஆள விடுறியா.."

என கூறி விட்டு பேஸ்புக்கில் வெட்டி கமெண்ட் கொடுக்கவும், நண்பர்களின் வீடியோக்கும், ஃபோட்டோக்கும் லைக்  கொடுக்கவும் சென்றுவிட்டான்...

சென்று விட்டான் சொல்வதை விட.. சென்று விட்டேன் என்று சொல்வதுதான் சரியாயிருக்கும்...

அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தா எனக்கு என்ன...?
மூன்று பேருக்காக செங்கொடி உயிர் விட்டா எனக்கு என்ன...?
மூன்று பேரும் தூக்குல தொங்குனா எனக்கு என்ன..?

எனக்கு என் வேலை முக்கியம்.. என் குடும்பம் முக்கியம்...

இருபது வருடம் கழித்து என் மகன் கேட்பான் "ஒரு தப்பு செய்யாத மூன்று பேர கொண்ணாங்களே.. அப்ப நீங்க ஒன்னும் பண்ணலயா..."என்று,

அப்பொது தலை தாழ்த்தி நிற்கப்போவதற்கு பதிலா, இப்பவே கூனி குறுகி நிற்கிறேன்..

என்னால் வேற என்ன செய்ய முடியும் இயலாமையுடன் நிற்பது தவிர..

செப்டம்பர் 10 காலையில் எல்லா நாளிதழ்கள் வரும், அப்போது தெரியும்..

நாம் வீரத்தமிழர்களா...? மண்ணை கவ்வினவர்களா என்று...!!

என் காதலியிடம் என் பழைய காதலை கூறினேன்..!!

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


அழகான மாலைப் பொழுதில்..

என் காதலியிடம் என் பழைய காதலை கூறினேன்..!!

அவள்தான் என்னை  எமாற்றிவிட்டாள் என்றேன்..

உச்.. கொட்டினாள்...!!

சிறிது இளைப்பாறலுக்குப் பின்..

அவளது பழைய காதலை சொல்ல ஆரம்பித்தாள்..

சுவாரசியமாக கூறினாள்...!!

அவள்தான் அவனை எமாற்றிவிட்டதாக கூறி வருத்தப்பட்டாள்..

எனக்கு இப்போது பயம் தொற்றிக்கொண்டது..

எங்கே என்னையும் எமாற்றிவிடுவாளோ என்று...!!

காலண்டர் அட்டை

2011-09-03

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
 
 
அன்றோரு நாள் ஸ்கூலில் புக்கும், நோட்டும் கொடுத்தார்கள்..

நண்பர்கள் பலர் ப்ரவுன் கலரால் ஜோடித்து வந்தனர்...

நாங்கள் முழு நிர்வாணமாக கொண்டு சென்றோம்...
...
ஆசிரியரின் திட்டை வீட்டில் நாங்கள் திட்டினோம்...

எங்களுக்கு வீட்டிலும் உதை கிடைத்தது...

எப்படியோ கெஞ்சி கூத்தாடி, தமிழ், ஆங்கில கட்டுரை நோட்டுகளை மட்டும் திருமண ஜோடிகளைப் போல லேமினஸனால் அலங்கரித்தோம்..

லேபிளும், பைண்டிங்குமாக புத்தகங்கள் வகுப்பறையில் அணிவகுத்தன...

நாங்கள் எங்களுடைய புத்தகம் மற்றும் நோட்டின் மீது கடந்த கால லீவுகளையும், விழாக்களையும் கட்டங்களில் பார்த்துக் மகிழ்ந்துக் கொண்டிருந்தோம்...

பெண்ணே ! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
 
 
 
பெண்ணே ! உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

பேருந்து பயணத்தில் உங்கள் தலையில் சூடிய மல்லிகைப் பூவை சிதற விடாதீர்கள்...!!

பின்னால் தனியாக தொங்கி கொண்டிருக்கும் உங்கள் அழகிய கூந்தலை அடிக்கடி முன்னாடி பின்னாடி அலைக்கலைக்காதீர்கள்...!!
...
உங்கள் வரண்டு போன ரோஜா போன்ற இதழ்களை அடிக்கடி உங்கள் உமிழ் நீரால் குளிப்பாட்டாதீர்கள்...!!

கோபமாய் பார்க்க வேண்டிய நேரத்தில் கரிசனமாய் பார்க்காதீர்கள்...!!

பிங்க் கலரால் வர்ணம் தீட்டப்பட்ட உங்கள் அழகிய நகத்தால் மொபைலை அடிக்கடி நொண்டாதீர்கள்..!!

அண்ணம் போல் இருக்கும் உங்கள் அழகிய பாதங்களை ஹீல்ஸ் செருப்பில் இருந்து எடுத்து வெளிய காட்டாதீர்கள்...!!

எனெனில்

அன்று இரவு நீங்கள் எங்கள் சிற்றின்ப கனவுகளில் வந்து தொல்லை பண்ணலாம்;

அல்லது

நாங்கள் தொலைக்க நினைக்கும் மறக்க நினைக்கும் எங்கள் பழைய காதல், காதலிகளை நினைவுப்படுத்தலாம்;

எங்கள் இயலாமையை தூண்டி விட்டு வெட்கப்பட வைக்கலாம்..!!

தயவுசெய்து எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்..!!
 
 
 
ஒவியம் : இளையராஜா