கெமும் ஆச்சே கொல்கத்தா ? பயணக்கட்டுரை

2021-12-18

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்



 நண்பர் திருமுருகனின் முதலாவது கட்டுரை தொகுப்பு இது. தலைப்பு தனித்துவமாக ஈர்க்கிறது. 

தன் வங்கிப் பணி நிமித்தமாக கொல்கத்தா நகரில் இரண்டு வருடங்கள் வாழ்ந்தது மட்டுமல்லாமல் அந்நகரில் வாழ்ந்த அனுபவங்களை  மிகுந்த அக்கறையையுடன் நேர்த்தியான கட்டுரைகளாக உருவாக்கியிருக்கிறார். வாசிக்கும் போது  சிறந்த வாழ்வியல் அனுபவத்தை தந்தது. கல்கத்தா நகரில் சுற்றி வந்தது போல இருந்தது.  

பந்தல் என்னும் துர்கா பூஜையைப் பற்றிய கட்டுரை இத்தொகுப்பில் சிறந்ததாக எனக்கு பட்டது. மேலும் கல்கத்தா நகரின் கால்பந்து கிளப் மற்றும் அதன் உருவாக்கத்தின் வரலாற்றை விரிவாக பதிவு பண்ணியிருக்கிறார். 

உணவு, ரோட்டுகடை, டிராம், ரிக்‌ஷா, இனிப்புகள் என தான் அவதானித்த அனைத்தையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.  

நகரின் அனுபவத்தை சொல்லியது போல, அந்நகரின் மனிதர்களை இன்னும் நெருக்கமாக அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்கின்ற குறையைத் தவிர , முதல் படைப்பு போல் இல்லாமல் நல்ல அடர்த்தியான மொழி ஆளுமையுடன் , சுவாரஸ்யமான கட்டுரைகளுடன் சிறந்த வாசிப்பனுபவத்தை கொடுக்கிறது இப்புத்தகம்.