யாமம்

2011-05-10

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

யாமம் -- நான் படிக்கும் ராமகிருஷ்ணனுடைய முதல் நாவல்.  இதற்கு முன்பு அவருடைய கட்டுரை தொகுப்புகளையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். புதிதாக படிக்கும் எவரையும் தன் பக்கம் இழுக்கும் எழுத்து அவருடையது..

யாமம் என்பது ஒரு வாசனை திரவியம். அதனை உடம்பில் பூசிக்கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கையும், இரவுக்கும் மனித இனத்துக்கும் உள்ள உறவையும் காலம் கடந்து இட்டு செல்கிறது இந்த நாவல்..
கதை சென்னையின் வரலாற்றை கூறுகிறது என்று பொத்தம் பொதுவாக சொன்னாலும், கதை அவ்வாறு இல்லாமல் பலதரப்பட்ட ஊர்களுக்கு பயணம் செல்கிறது..

பலதரப்பட்ட கதைகளின் வழியே நாவல்  செல்கிறது. வாசனை திரவியம் தயாரிக்கும் கரீமின் குடும்பம், நெல்லையிலிருந்து வந்து ஆங்கிலயரின் கீழ் வேலை பார்க்கும் பத்ரகிரி குடும்பம், லண்டனுக்கு  கணித மேல் படிப்புக்காக செல்லும்  பத்ரகிரி தம்பி திருச்சிற்றம்பலம் ,  நாயின் பின்னாலே வரும் சதாசிவ பண்டாரம் , மேல்மலையிலிருந்து வந்திருக்கும் கிருஷ்ணன் கரையாள்  இந்த கதா பாத்திரங்களின் வழியே கதை செல்கிறது..

இந்தியாவிற்குள் எப்படி வெள்ளைகாரர்கள் வந்தார்கள் , சென்னை நகரத்தை எவ்வாறு பிரான்சிஸ் டே வடிவமைத்தார் , இந்தியாவின் செல்வங்கள் எப்படி அவர்களால் திருடப்பட்டது.. மாஞ்சோழை, தென்மலை போன்ற இடங்களில் எப்படி தேயிலை தோட்டம் உருவானது போன்ற வரலாற்று நிகழ்ச்சிகள்  வழியே கதை செல்கிறது..

உணமையிலேயே நாவல் முடியும் போது அத்தர் மனம் நமக்கும் அடிக்கிறது...ஒரே நாளில் இந்த நாவலை படித்து முடித்தேன்.

இந்த நாவலுக்காக ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது கிடைத்துள்ளது..

குடி'மகன் '

2011-05-06

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
" என்னடே, உங்க அப்பா எப்படி இருக்காரு, இப்ப பரவாயில்லையா இல்ல இப்பவும் அதே குடிதானா..?" என்று சொந்தகார்களாலும் , தெரிந்தவர்களாலும்  கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு சிறிய பையனின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்திருக்கீர்களா...? பதிலுக்கு அந்த பையன் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு சிரிப்புடன் " இப்ப குடிக்கிறதில்லை " என்று நகர்ந்து செல்லும் போது அவன் தலை தாழ்ந்து இருக்கும்...

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள தத்தம் அப்பாவைப் பற்றி புகழ்ந்து பேசும் போது தன் அப்பாவை பற்றி ஏதும் கேட்பார்களோ, அப்படியே கேட்டாலும் அப்பாவை பற்றி பெருமையாக கூறிவிட்டு  ,  கூனி குறுகி எப்படா இந்த இடத்தை விட்டு நகலலாம் என்று அவன் மனம் துடிக்கும்...

"டேய் உங்க அப்பாவ  இன்னும் காணல, போய் பஜார்ல பார்த்துட்டு வாடா " என்று அம்மா சொல்லும் போது , பஜார்ல உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் லயும் தேடி, கடைசியில் ஒரு டாஸ்மாக்  பக்கத்தில் தன் சைக்கிள்  மேலே குடி போதையில் விழுந்து கிடக்கும் அப்பாவைத்தூக்கி ஒரு கையில் சைக்கிளையும் மறு கையில் அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரும் போது தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடுவார்களோ என மனது பதைபதைக்கும்...

திருவிழா காலங்களில் பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கும் போது ,அப்பா குடித்து விட்டு பிரச்சினை  பண்ணும் போது ,திருவிழா சந்தோசங்களை எல்லாம் துறந்து விட்டு  அவன் செல்லும் போது அவன் மனது எல்லாம் சந்தோசமும் கொஞ்ச நேரம் தான் என்ற தத்துவ நிலைக்கு வந்திருப்பான்..

இப்படி குடிகார தகப்பனால் வளரப்படும் பிள்ளை, நெறைய பிரச்சனைகளை சந்தித்து தேர்ந்தெடுத்த அனுபவசாலியயிருப்பான்...
இந்தக்குடியை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பிரச்சினைகள் வருவதில்லை, ஏனெனில் அவர்கள் மேசை குடிகாரர்கள்...அவர்களின் பிள்ளைகளும் ஒரு குடிகாரர்கள் தான்..

அரசு தான் மக்களுக்கு கூலியாக காசு கொடுத்து, அதை தானே புடுங்கிற கேவலமான வேலை தான் இங்கு நடக்கிறது..

எல்லாம் குடிகாரர்களும் நல்லவர்கள்தான் குடிக்காதவரைக்கும்....

அவன்   அப்பா நல்லவர்தான்....!!!