நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள தத்தம் அப்பாவைப் பற்றி புகழ்ந்து பேசும் போது தன் அப்பாவை பற்றி ஏதும் கேட்பார்களோ, அப்படியே கேட்டாலும் அப்பாவை பற்றி பெருமையாக கூறிவிட்டு , கூனி குறுகி எப்படா இந்த இடத்தை விட்டு நகலலாம் என்று அவன் மனம் துடிக்கும்...
"டேய் உங்க அப்பாவ இன்னும் காணல, போய் பஜார்ல பார்த்துட்டு வாடா " என்று அம்மா சொல்லும் போது , பஜார்ல உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் லயும் தேடி, கடைசியில் ஒரு டாஸ்மாக் பக்கத்தில் தன் சைக்கிள் மேலே குடி போதையில் விழுந்து கிடக்கும் அப்பாவைத்தூக்கி ஒரு கையில் சைக்கிளையும் மறு கையில் அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரும் போது தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடுவார்களோ என மனது பதைபதைக்கும்...
திருவிழா காலங்களில் பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கும் போது ,அப்பா குடித்து விட்டு பிரச்சினை பண்ணும் போது ,திருவிழா சந்தோசங்களை எல்லாம் துறந்து விட்டு அவன் செல்லும் போது அவன் மனது எல்லாம் சந்தோசமும் கொஞ்ச நேரம் தான் என்ற தத்துவ நிலைக்கு வந்திருப்பான்..
இப்படி குடிகார தகப்பனால் வளரப்படும் பிள்ளை, நெறைய பிரச்சனைகளை சந்தித்து தேர்ந்தெடுத்த அனுபவசாலியயிருப்பான்...
இந்தக்குடியை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பிரச்சினைகள் வருவதில்லை, ஏனெனில் அவர்கள் மேசை குடிகாரர்கள்...அவர்களின் பிள்ளைகளும் ஒரு குடிகாரர்கள் தான்..
அரசு தான் மக்களுக்கு கூலியாக காசு கொடுத்து, அதை தானே புடுங்கிற கேவலமான வேலை தான் இங்கு நடக்கிறது..
எல்லாம் குடிகாரர்களும் நல்லவர்கள்தான் குடிக்காதவரைக்கும்....
அவன் அப்பா நல்லவர்தான்....!!!


