கபிலன் சிலை-- சிறுகதை

2011-08-25

| | |







வீட்டு முன்னால் ஓலைப்பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தலின் நடுவே வெள்ளைத்துணி கட்டியிருந்தார்கள். வீடு முழுவதும் மரண ஒலம் கேட்டுக்கொண்டிருந்த்து. " ஏய், ஐயா, என்ன பெத்த ராசா...!! என்ன விட்டுட்டு போயிட்டியே... அய்யோ... கபிலா.. இப்படி எங்கல தனியா விட்டுட்டு போயிட்டியே..." என்று வாயில் எச்சில் ஒழுக அழுதுக்கொண்டிருந்த்னர். மரண செய்தி கேட்டு சொந்தகாரர்கள், தெரிந்தவரகள் வர ஆரம்பித்தனர். வீட்டுக்கு முன்பு சைக்கிளும், டூவீலரும் குவிந்து இருந்தது. பந்தல் அருகே உள்ள ஒரு கல்லில் உட்கார்ந்திருந்தான் சிவா. அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்திருந்தது. காலையில் விசயத்தைக் கேட்டதிலிருந்து அழுதுக்ககொண்டேதான் இருந்தான். போஸ்ட் மார்ட்டம் முடிந்து பாடி வந்ததும் பெணகளுடன் சேர்ந்து பிணத்தை கட்டிப்பிடித்து அழுதான். மற்ற ஆம்பளைகளெல்லாம் விலகி நிற்க இவன் மட்டும் நெஞ்சில் அடித்து அடித்து அழுதான்.யாரும் அவனை த்டுக்க முடியல. கொஞ்சம் நேரம் கழித்து நன்பர்களெல்லாம் வந்து அவனை இழுத்துட்டு போய் வெளியே உட்கார வைத்தனர். பேச்சு வரவில்லை, வாய் கோணியது.

" டேய் மணி, நம்ம கபிலன் நம்மள விட்டுட்டு போயிட்டாண்டா...அய்யோ..கடவுளே.." என்று உளறிக்கொண்டிருந்தான். வந்தவர்கள் அனைவரும் இவனை வினோதமாக பார்த்தனர். நண்பர்களால் இவனை தேற்ற முடியவில்லை. தேம்பி தேம்பி அழுதான். உருண்டு பிரண்டு அழுததில் சாரமெல்லாம் அழுக்காயிருந்தது.

"தண்ணியாவது குடிடா..?" என்று கெஞ்சிக் கேட்டான் மணி. எந்த பதிலும் சொல்லாமல் நிலைக்குத்திப் போய் உட்கார்ந்திருந்தான். அவனாகவே வாய் திறந்தான்.

"நாந்தாண்டா.. கபிலன கொன்னென்.. பேசாம நான் ட்ரெயின்ல போறேன்னு சொன்னான்.. நாந்தான் பஸ்ல போன்னு டிராவல்ஸ்ல ஏத்திவிட்டேன்..."என்று அழுது கொட்டினான்.



ஜமுனா தன் தம்பியோடு வந்தாள். அவளைப் பார்த்தும் தன் இரு கையால் கண்ணைத்துடைத்துக் கொண்டான். அவளை அழைத்துட்டு போய் கபிலனின் உயிரற்ற உடலைக் காட்டினான்..அவள் அவளை அறியாமல் அழ ஆரம்பித்தாள். அப்படியே உட்கார்ந்து விட்டாள். கபிலனின் மேல் மாலைகள் குவிக்கப்பட்டிருந்தது..!



சிவா வீட்டுக்குள் சென்று அங்கிருந்த தன் அம்மாவிடம் எல்லாருக்கும் காபி கொடுக்க சொன்னான். தீடிரென்று ஆளே மாறி விட்டான். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்தான். நண்பர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.மதியம் மூன்று மணிக்கு மேல் கபிலனின் பாடியை தூக்குவதாக முடிவு பண்ணினர்.

மையான வண்டி வந்தது. கபிலன் அதில் எற்றப்பட்டான். சங்கு ஊதப்பட்டது. ஆம்பளைகள் வண்டியின் பின்னால் சென்றனர். பெண்கள் பெரும் கூச்சலிட்டு அழுதார்கள்.



ஜமுனாவும் ஆழுதாள். சிவா அம்மாவும், கபிலன் அம்மாவும் ஜமுனாவை வினோதமாக பார்த்தனர்." யார், இந்த பெண்ணென்று..?"..

வண்டிக்கு பின்னால் கபிலனின் முகத்தைப் பார்த்தவாறு வந்துக் கொண்டிருந்தான் சிவா. தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை தாண்டும் போது மயக்கம் வந்தது. கபிலனின் நினைவலைகள் சிவா மனதில் எழும்ப ஆரம்பித்தன.. அஸ்போர்ன்ஸ் ஸ்கூலப் பார்த்தான். கபிலனும் சிவாவும் அங்கதான் படித்தார்கள். அங்கு எட்டு வரைக்கும்தான். அதன்பின் ஜான்ஸ்ல படித்தார்கள். இஞ்ஜினியரிங்க் போறதுக்கு வாய்ப்பு கிடைத்தும் நான் சிவா கூடத்தான் படிபேன் என்று சேவியர்ஸ் காலேஜ்ல சிவா கூட சேர்ந்தான் கபிலன். சின்ன வயசிலேருந்து ஒன்னாதான் சுற்றுவாரகள். அவர்களுக்குள்ளே கருத்துவேறுபாடு வந்ததே கிடையாது.

என்ன கொஞ்சம் சிவா தைரியசாலி, கபிலன் கொஞ்சம் அமைதி டைப். வாரத்திற்கு ஒருமுறை கபிலனை படத்திற்கு கூட்டிட்டு போயிருவான் சிவா. பாம்பே தியேட்டர், பேரின்பவிலாஸ் தியேட்டர் என திருநெல்வேலி தியேட்டர் முழுவதும் சுற்றுவார்கள்.

எங்க போனாலும் சைக்களில்தான் போவார்கள். சிவாதான் அழுத்துவான். கபிலன் பார்கம்பில உட்கார்ந்திருப்பான்...

நைட் வ.வு.சி கிரவுண்ட்ல உட்கார்ந்திட்டு கதை பேசிக்கொண்டிருப்பார்கள். காலேஜ் படிப்பு முடிந்ததும் வேலை தேட ஆரம்பித்தர்கள்.

கபிலன் கவர்ன்மெண்ட் எக்ஸாம் கோச்சிங்க் போறேன்னுட்டு சாப்டர் ஸ்கூல் பக்கத்தில் உள்ள செண்டருக்கு போயிருவான். கபிலன் வர்ற வரைக்கும் மார்க்கெட்ல உள்ள் மணி கடையில் உட்கார்ந்திருப்பான் சிவா.. மணி இரண்டானதும் நேராக வாய்க்கால் பாலம் பஸ் ஸ்டாப்புக்கு போய் கபிலனை கூட்டிட்டு வருவான். வ.வு.சி கிரவுண்ட்ல உட்கார்ந்திருக்கும் போது சிவா சொன்னான்..

" கபிலா, ஜமுனாவ பார்த்தேன்டா.."

" எங்க வச்சுடா.. எப்ப பார்த்த..." என்று ஆர்வமாய் கேட்டான் கபிலன்.

"பாளை பஸ்டாண்ட்லதான்.. தோள்ல பேக்க மாட்டிகிட்டு சூப்பரா போனாடா.. ஆனா பேச முடியல..?

"சூப்பரா இருந்தா நமக்கென்னடா.. பேச்ச மாத்ரியா.. ப்ளீஸ்..."என்று சலிப்புடன் கூறினான்.

" யேய்.. சும்மா கத வுடாத.. அவள ஒரு தடவ கூட நினைக்க மாட்ட.. பெரிய இவன் கனக்கா பேசுற...உனக்கு அவள பார்ததா பயம்... அதான்.. அதுக்கு அவா என்ன பண்னுவா..நல்ல பொண்ணுடா.. நீதான் மிஸ் பண்ணிட்ட..காலேஜ் படிக்கும் போதே நீ சொல்லிருக்கனும்.. நான் போய் சொல்றேன்னாலும் நீ வேனான்னு சொல்லிட்ட..”

கபிலன் பதில் எதும் சொல்லவில்லை. எதிர்த்தாப்புல உள்ள கேலரிய பார்த்துட்டு இருந்தான். ஈகிள் புக் செண்டர் மேல ஜீஸஸ் சேவ்ஸ் அஸ் என்று லைட் எரிந்தது...

" என்னடா..ஒன்னும் சொல்ல மாட்டுக்க.. இப்ப ஒன்னும் கெட்டுப் போகல.. அவ இங்கதான் எங்கயாவது வேலை பார்ப்பா.. நாளைக்கு பாளைபஸ்டாண்டுக்கு போவோம்.. பார்த்து பேசுவொம்.. என்ன ஒகேவா..." என்றான் சிவா.

கபிலன் சிரித்தான். தொலைந்து போன காதலை மறுபடியும் தேட ஆரம்பித்தான்.


ஜமுனாவை நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது. காலேஜ் படிக்கும் போதே கைக்கூடும் நிலையில்தான் கபிலன், ஜமுனா காதல் இருந்தது. ஆனால் காதலை வெளிப்படுத்தாமலே இருவருமே பிரிந்தனர். மறுபடியும் ஜமுனாவைத் தேடி கபிலன் போக விரும்பவில்லை. தேடிப்போய் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தால் தன்னால் தாங்க முடியாது என்று நினைத்து அவளது எண்ணத்தை மறக்க முயர்ச்சித்தான்..இப்பொழுது நாளை பார்க்கப்போகிற சந்தோசத்தில் தூங்கிப்போனான். .



காலையில் பாளைபஸ்டாண்டு ஹோட்டல் சரவனாஸ் அருகே நின்றுக்கொண்டிருந்தனர். அவள் வேனி பஸ்ல வந்து இறங்கினாள்.

சிக்னலை கிராஸ் பண்ணி நடக்க ஆரம்பித்தாள். ஜமுனா முன்ன விட இப்போது ரொம்ப அழகாயிருப்பதாக கபிலனுக்கு தோன்றியது.

" வாடா.." என்று இழுத்துட்டுப் போனான் சிவா. ஜமுனா முன்னால் போனாள். தீடீரென்று ஸ்டேட் பேங்குள் நுழைந்தாள்.

இவர்களுக்கு திகைப்பாயிருந்தது. இவர்கள் உள்ளே போய் அவளைத் தேடினார்கள். ஜமுனா கபிலனை பார்த்துவிட்டாள். அழகிய சிரிப்புடன் அருகில் வந்தாள்.

" கபிலா, எப்படி இருக்கிங்க..!!" என்றாள் கண்ணில் ஆர்வம் பொங்க.

"ம்ம்ம்.. நல்லா இருக்கேன்...உங்கள பார்க்கதான் வந்தேன்.. ஆனால் நீங்க இங்க வேலை பார்க்கிறீங்கன்னு எனக்கு தெரியாது.."

"என்ன பார்க்கவா..?" கண் விழி உயர்ந்தது. அருகில் இருந்த சிவா "வாங்களேன் வெளிய போய் பேசிட்டு வரலாம்.." என்றான்.

"வரேன்.." என்று கூறிவிட்டு உள்ளே போய் யர்ரிடமோ சொல்லிவிட்டு வெளிய வந்தாள்.

மூவரும் அரசனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். சிவா முன்னாடி போனான். பின்னாடி ஜமுனாவும் கபிலனும் சிரித்து சிரித்து

பேசிட்டு வந்தனர். கபிலனுக்கு கூச்சம் எல்லம் போயிருந்தது..

அரசனில் ஜீஸ் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்தனர். கபிலன்தான் ஆரம்பித்தான்.

" உங்கள மறுபடியும் பார்ப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை.. ரொம்ப சந்தோசமா இருக்குது " என்றான்.. சிவா நைசா நழுவ பார்த்தான்." நீ பேசிட்டு இருடா..வெளிய மணி போற மாதிரி இருக்குது.. பார்த்துட்டு வந்துருதேன்.."என்று கிள்ம்பினான்.

கபிலனும், ஜமுனாவும் சிரித்துக் கொண்டார்கள். கணகளால் பேசிக்கொண்டார்கள். சிவா உள்ளே வரும் போது கபிலன் பேசிக் கொண்டிருந்தான்

" எப்படிங்க.. இண்டர்வியு ரொம்ப கஷ்டமா இருக்குமா.. ?"

சிவா தன் தலையில் அடித்து கொண்டான்.


"ஹலோ, என்னங்க பேசிக்கிட்டிருக்கிங்க.. ஜமுனா இங்க பாருங்க..நான் ஒபனாவே கேட்குறேன்.. காலேஜ்ல இருந்தே உங்க மேல உசிர வச்சிருக்கான் கபிலன்.. நீங்க என்ன சொல்றீங்க.." என்று போட்டு உடைத்தான். அவன் அப்படி கேட்டது. அவள் முகத்தில் வெட்கத்தை உண்டு பண்ணியது. இருவரையும் பார்த்தான் சிவா.


"பதிலை யாருட்ட சொல்லனும்.. உங்ககிட்டயா.. இல்ல உங்க நணபர்கிட்டயா.." என்றாள் ஜமுனா.

"இந்த உத்தமபுத்திரண்டதான்" என்று கபிலன் தலையை தன் கையால் திருப்பி காட்டினான் சிவா. அவள் சிரிச்சிகிட்டு

"பிடிச்சிருக்கு... போதுமா.."என்றாள். கபிலன் சந்தோசத்தின் உச்ச்த்திற்கு சென்றான். அன்றிலிருந்து கபிலன் தினமும் ஜமுனாவை பார்க்க செல்ல ஆரம்பித்தான். அவர்கள் காதல் ஆரோக்கியமாக வளர்ந்தது..இதற்கெல்லாம் சிவாதான் காரணம் என்று நினைத்துக் கொள்வான் கபிலன்.



ஜங்ஸனில் நல்ல கூட்டம். சென்னைல பேங்க் எக்ஸாம் இருந்தது. அத்ற்கு கபிலனை வழியனுப்ப வந்திருந்தான் சிவா. கூட்டத்தை பார்ததும் " பஸ்ல போடா.." என்று வர மறுத்த கபிலனை வலுகட்டாயமா இழுத்துட்டு வந்து பஸ்ல எற்றிவிட்டான்.

" நல்லா எக்ஸாம் எழுதுடா.. அப்புறம் ஜமுனாவும் பேங்கு, நீயும் பேங்கு.. கலக்கலாம்.." கபிலன் சிரித்துக்கொண்டே கை ஆட்டினான். அதுதான் அவன் கடைசி சிரிப்பா இருந்தது.



வெள்ளக்கோவில்ல கபிலனை எரித்தார்கள். தாமிரபரணியில் தலை மூழ்கி வீடு வந்து சேர்ந்தார்கள். அதனை தொடர்ந்து மூன்றாவது நாள் விசஷேம், பதினாறாவது நாள் விசஷேம் என முன்னின்று நடத்தி வைத்தான். எப்பொழுதும் சோகமாக திரிய ஆரம்பித்தான். உடல் மெலிய ஆரம்பித்தான். தாடி வளர்த்தான்.சிவா அம்மா எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். இவன் அசையவில்லை. கபிலன் கூட எங்கெல்லாம் சுற்றினானோ அங்கெல்லாம் போய் உட்கார ஆரம்பிததான். நம்மாலதான் கபிலன் இறந்தான் என்று நினைக்கும் பொதெல்லாம் இந்த உலகத்தை வெறுக்க ஆரம்பித்தான். இரண்டு தடவை தற்கொலை செய்ய முற்பட்டு தோற்றுப்போனான்...

தீடீரென்று கபிலன் தான் கனவில் வந்து தான் சாதிக்க நினைத்ததை நீயாவது செய்யுடா என்று சொன்னதாகவும் , அடுத்த நாள் முதல் சிவாவும் கிளாஸ் போக ஆரம்பித்தான். சிவா வீட்ல ரொம்ப சந்தோசப்பட்டார்கள். பையன் திருந்திவிட்டான் என்று.. அடிக்கடி ஜமுனாவை போய் பார்ப்பான். அவள்க்கு இவன் ஆறுதல் கூறுவான். இவனுக்கு அவள் ஆறுதல் கூறுவாள்.

குருப் 2 ரிசலட் வந்தது. இண்டர்வியூ போறதுக்கு முதன்முறையா தாடியை எடுத்தான். பளிச்சென்று இருந்தான். கபிலனின் இரண்டாவது நினைவு தினம் வந்தது. நண்பர்கள் அனைவரும் பெரிய அளவில் பண்ண பிளான் பண்ணினார்கள்.

மணிதான் சொன்னான் " பேப்பர்ல பெரிய விளம்ப்ரம் கொடுப்போம். தெற்கு பஜார் முழுவதும் பேனர் வைப்போம்.. " என்றான்.





சிவா யோசிச்சிக்கொண்டே உட்கார்ந்திருந்தான். அடுத்த நாள் குருப் 2 இண்டர்வியூ ரிசல்ட் வந்தது. இண்டர்வியூவில் பெயில் ஆயிருந்தான். அதை பற்றி அவன் கவலைப்படவில்லை..





சைக்கிளை எடுத்துட்டு சமாதானபுரம் ரோட்ல போனான். சிலை செய்யிற கடைக்கு போனான். அங்கே எம்.ஜி.ஆரும், காந்தியும், அண்ணாவும் நின்றுக் கொண்டிருந்தனர்.. ஒனரைப் பார்த்தான்.

" ஐயா, ஒரு சிலை செய்யனும்.."

"யார் சிலைப்பா.." என்றார் பெரியவர்.

தன் பாக்கெட்டில் இருந்து கபிலன் போட்டாவை எடுத்துக் கொடுத்தான். பெரியவர் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்தார். தன் நண்பனைப் பற்றி சொன்னான்.

பெரியவர் ஆதங்கப்பட்டார் " கண்டிப்பா நல்ல பண்ணிரலாம் தம்பி " என்று சிவாவை அனுப்பி வைத்தார்..





தன் வீட்டு முன்னால் உள்ள இடத்தை சுத்தம் செய்தான். சிலையை கொண்டு வந்து இற்க்கினார்கள். சிலையை நிறுத்தினர். அவன் நினைவு நாளன்று கிளரிந்தா சர்ச், நூற்றாண்டு மண்டபம் அங்குள்ள பிச்சைககாரர்கள், எழை எளியவர்களை அழைத்துட்டு வந்து சாப்பாடு போட்டான். கபிலன் அப்பாதான் சிலையைத் திறந்த்தார். ஜமுனாவும் வந்திருந்தாள்.

நண்பர்களும், ஜமுனாவும், சிவாவும் கபிலன் சிலையை கண் கலங்க பார்த்துக்கொண்டிருந்தனர்.



என்னுயிராய் இருந்தாய்....!



         என்னை விட்டு சென்றாய்....!



                  என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய்....!



                            நண்பனே...!



என்று சிலையின் அடியில் பொரிக்கப்பட்டிருந்தது...

கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தான் கபிலன்.....!!

0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Post a Comment