" தெய்வத்திருமகள்--- தந்தையின் தாலாட்டு "

2011-07-17

| | |


விக்ரமின்  "தெய்வத்திருமகன்" நான் ரொம்பவும் எதிர்பார்த்த படம்.  கடைசியில்  "தெய்வத்திருமகளாக" வெளி வந்தது.

முதல் நாளே நண்பர் சுப்பையா நைட் ஷோ பார்த்துட்டு இரவு இரண்டு மணிக்கு " படம், சூப்பரோ சூப்பர் " என்று sms அனுப்பினார். அடுத்த நாள் காலையில் படத்தை அவ்வளவு அழகாக விமர்சித்தார். அவர் சொன்ன விதம் படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டியது.

படத்தின் டைட்டில் கார்டில்  Dr .சீயான்  விக்ரம்...  வாழ்த்துகள் விக்ரம்  ...

படத்தில் ஆறு வயது மன நிலையில் உள்ள ஒரு இளைஞன் கேரக்டர் விக்ரமிற்கு.. கிருஷ்ணா கேரக்டரில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்... அவர் மட்டுமே இந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும்..
" என்னடா, இந்த மெண்டல் இப்படி போட்டு அறுக்கிறான் " என்று நம்மை முகம் சுழிக்க வைக்காமல், அழகாக ரசிக்க வைக்கிறார்.

சில காட்சிகளின் போது என் உடலின் சிறகு முளைக்கிறது, மனம் லேசானது, சந்தோசம் மனசு பூராவும் இருந்த்தது..
அவன் குழைந்த தனமாக இருந்தாலும் சின்ன சின்ன விசயத்திலும் perfection  ஆக இருக்கிறான். " தண்ணீர் பைப்பை மூடுவது, டிராபிக் சிக்னலில் Go என்று விழுந்ததுமே தான்  நடக்கிறான், அதுவும் வண்டியே வராத ரோட்ல!! "

கடற்கரையில் தன் பணத்தை திருடி விட்டு ஓடும் திருடன், மீன் பிடிக்கிற வலையில் கால் தட்டி விழ ,கிருஷ்ணா அந்த திருடனுக்கு கை கொடுத்து துக்கி விடுவது ,
காக்கா குஞ்சு ஒன்றை பூனையிடம் இருந்து காப்பாற்றி மரத்தில் மேல் ஏறி அதன் கூட்டில் வைக்கிறது ( இந்த காட்சி ஈரானிய திரைப்படமான color of paradise ல் வருகிறது. அதனால் என்ன தமிழ் ரசிகர்களுக்கு இது புதுசுதான்),


கிருஷ்ணா நண்பர்கள் அவர்களும் மனநிலை குன்றியவர்கள். வாழ்க்கையை அழகாக எதிர் கொள்கிறார்கள். அவர்களோடு தன் குழந்தை
நிலாவிற்கு ஷூ எடுத்து கொண்டு பலூன் பிடித்துக்கொண்டே வருவது .. என பல காட்சிகள் என்னை சிறகு முளைக்க  வைத்தன..

படம் முடிந்து வந்தாலும் இப்ப வரை படத்தின் பின்னணி இசை மற்றும் சில வசனங்களும் மனதில் ஒலித்து கொண்டே இருக்கிறது...  

" நீங்க கூட்டிட்டு போறது ஒரு குழந்தைய   அல்ல , இரண்டு குழைந்தையை ..."
"அப்பா வந்தாச்சு, நிலா வந்தாச்சு..!"
"காக்கா ஏன் கருப்ப இருக்கு, வெயில்ல ரொம்ப அலையிதுலா அதான்... யானை ஏன் பெருசா இருக்கு, நெறைய சாப்பிடுதுலா  அதான்.."
"நிலா எப்ப வருவா, அம்மாவாசைக்கு அப்புறம்..!!"

விக்ரமின் குழைந்தையாக வரும் நிலா-- பௌர்ணமி நிலா..

இந்த படத்த பார்த்ததுக்கு அப்புறம் குழைந்தைகள் உலகம் எவ்வளவு அழகாக உள்ளது என்று தோன்றுகிறது..

இந்தப்படம் ஆங்கில படமான " I am sam " என்ற படத்திலிருந்து  சுட்டது,  இதை நாங்க பார்க்க மாட்டோம், வரவேற்க மாட்டோம், டைரக்டர் விஜய் கிட்ட சரக்கு இல்ல என்று விமர்சனம் எழுதுபவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை.

 படத்தை நான் ரசிச்சேன்,கண் கலங்கினேன்,கண்ணீரோடு வெளியே வந்தேன்..
போட்டிகள் நிறைந்த இந்த உலகம் அழகாக இருந்தது. அன்பு மட்டும் எங்கும் கொட்டி கிடந்தது....
  

4 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்:

Anonymous said...

nanum ungal vimarsanam paditha pin arvamaha ulathu....
Padam partha piraghu yen vimarssanathai pathivu seikiren

Anonymous said...

nanum ungal vimarsanam paditha pin arvamaha ulathu....
Padam partha piraghu yen vimarssanathai pathivu seikiren
By
jude

சிவா said...

nanba sorry,. nan innum padam parkala,. pathathum comment tharen,.

ஜெபா said...

thanks siva

Post a Comment