யாமம் -- நான் படிக்கும் ராமகிருஷ்ணனுடைய முதல் நாவல். இதற்கு முன்பு அவருடைய கட்டுரை தொகுப்புகளையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். புதிதாக படிக்கும் எவரையும் தன் பக்கம் இழுக்கும் எழுத்து அவருடையது..
யாமம் என்பது ஒரு வாசனை திரவியம். அதனை உடம்பில் பூசிக்கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கையும், இரவுக்கும் மனித இனத்துக்கும் உள்ள உறவையும் காலம் கடந்து இட்டு செல்கிறது இந்த நாவல்..
கதை சென்னையின் வரலாற்றை கூறுகிறது என்று பொத்தம் பொதுவாக சொன்னாலும், கதை அவ்வாறு இல்லாமல் பலதரப்பட்ட ஊர்களுக்கு பயணம் செல்கிறது..
பலதரப்பட்ட கதைகளின் வழியே நாவல் செல்கிறது. வாசனை திரவியம் தயாரிக்கும் கரீமின் குடும்பம், நெல்லையிலிருந்து வந்து ஆங்கிலயரின் கீழ் வேலை பார்க்கும் பத்ரகிரி குடும்பம், லண்டனுக்கு கணித மேல் படிப்புக்காக செல்லும் பத்ரகிரி தம்பி திருச்சிற்றம்பலம் , நாயின் பின்னாலே வரும் சதாசிவ பண்டாரம் , மேல்மலையிலிருந்து வந்திருக்கும் கிருஷ்ணன் கரையாள் இந்த கதா பாத்திரங்களின் வழியே கதை செல்கிறது..
இந்தியாவிற்குள் எப்படி வெள்ளைகாரர்கள் வந்தார்கள் , சென்னை நகரத்தை எவ்வாறு பிரான்சிஸ் டே வடிவமைத்தார் , இந்தியாவின் செல்வங்கள் எப்படி அவர்களால் திருடப்பட்டது.. மாஞ்சோழை, தென்மலை போன்ற இடங்களில் எப்படி தேயிலை தோட்டம் உருவானது போன்ற வரலாற்று நிகழ்ச்சிகள் வழியே கதை செல்கிறது..
உணமையிலேயே நாவல் முடியும் போது அத்தர் மனம் நமக்கும் அடிக்கிறது...ஒரே நாளில் இந்த நாவலை படித்து முடித்தேன்.
இந்த நாவலுக்காக ராமகிருஷ்ணனுக்கு தாகூர் விருது கிடைத்துள்ளது..