மொட்டைக்கிறிக்கி -- சிறுகதை

2011-08-27

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்


மூன்று நாளுக்கு மேலாக அவளைக் காணவில்லை. எத்தனை நாள்தான் லூர்து நாதன் சிலை பக்கத்தில் உள்ள பூங்காவில் நின்னுகிட்டு அவள் வருகிறாளான்னு பார்க்கிறது..?

எப்பொழுதும் உமா, பூர்ணிமா கூடத்தான் வருவாள். இந்த மூன்று நாளுமே
அவர்கள் இரண்டு பேருதான் வருகிறார்கள். அவர்களிடம் கேட்பதற்கும் வெட்கமாயிருந்தது.

கிளாஸ்ல எல்லாருட்டயும் சொல்லி விடுவாங்கன்னு பயம்தான்..! நாளாவது நாளும் நின்று கொண்டிருந்தேன்.. அவள் அம்மாவுடன் வந்துக் கொண்டிருந்தாள். முகத்தில் மஞ்சள் பூசியிருந்தாள். கழுத்தில் தங்கம் மின்னியது. அழகாயிருந்தாள்..அழகான கொழுசு போட்டிருந்தாள். அந்த வெள்ளைச் சட்டையும், சிகப்பு பாவடையும் அவளுக்கு ரம்மியமாயிருந்தது.. இதற்கு முன்னால் எத்தனயோ தடவை பார்த்தவள்தான்..இன்று அதிகமாக அழகாயிருந்தாள். அவள் கிராப் தலையில் ரோஜா
ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அவளது அம்மா உம்மென்று மூஞ்சியை வைத்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மாவுடன் முருகன் கோவிலுக்கு போய் விட்டு ஸ்கூலுக்கு வந்தாள். நான் அதற்கு முன்பே ஸ்கூலுக்குப் போய்பெஞ்சில் உட்கார்ந்துக்கொண்டேன். அவளுடய அம்மா பிரமிளா மிஸ்ஸிடம் எதோசொல்லிட்டு அவளை விட்டு சென்றாள். பிரமிளா மிஸ் சிரிச்சிக்கிட்டே அவளை அனுப்பி வைத்தார்கள். அவள் பெண்கள் பக்கம் போய் உட்கார்ந்ததும் தோழிகள்அவளைச் சூழ்ந்துக் கொண்டனர்.. பள்ளி இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஒவ்வொருத்தரா வந்துக்கொண்டிருந்தனர். சிவா இன்னும் வரவில்லை.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

" மக்கா, நம்ம மொட்டைக்கிறுக்கி இன்னைக்கு ஜோக்கா வந்திருக்கா
பார்த்தியா..?" என்று கூறிக்கொண்டே பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் மணி.
மொட்டைக்கிறுக்கினு பட்டப்பெயரை சொன்னதும் எனக்கு கோபம் வந்தது.
இருந்தாலும் வெளிக்காட்டவில்லை.

அவளுடய உண்மையான பெயர் ஜமுனா. ஆனால் பசங்க மத்தியில் மொட்டைக்கிறிக்கிதான். ஆறாவது படிக்கும் போது மொட்டை போட்டுட்டு வந்தாள். அதிலிருந்து அவளது பட்டப்பெயராகிவிட்டது. அப்புறமும் முடியை வளர்க்காமல் கிராப் கட்டிங்க்லதான் வருவாள். அது அவளுக்கு எடுப்பா இருக்கும். எத்தனயோ தெற்றுப்பல் பெண்களைப் பார்த்தாலும் அவளது தெற்றுப்பல் ஒரு அழகுதான்.
அந்த தெற்றுப்பல்லோடு அவள் சிரித்த சிரிப்பில்தான் நான் மயங்கினேன்.
இன்னும் ஞாபகம் இருக்கு அவளை முதன் முதல் பார்த்தது.
 
நான் புதுசாக ஸ்கூலுக்கு சேர வந்திருந்தேன். இரண்டு வருடம் கழித்து

மறுபடியும் அதே ஸ்கூலுக்கு வந்திருந்தேன். இரண்டு வருடம் அம்மா ஊர்ல
படித்தேன். அப்புறம் பாளையங்கோட்டை வந்ததும், நான் ஏற்கனவே படித்த
அஸ்போர்ன்ஸ் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க..இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவள் அங்கு வந்து சேர்ந்திருந்தாள்.
அட்மிஷன் போட்டுட்டு கிளாஸ் ரூம் உள்ளே வரும் போதே சிவா என்னைப் பார்த்து சந்தோசமா கையை ஆட்டினான். நான் எற்கனவே படித்ததால் எல்லா மிஸ்களையும் எனக்கு தெரியும். கிளாஸ் மிஸ் ஜோன்ஸ் என்னிடம் பேசிவிட்டு என்னை உட்கார
சொன்னார்கள். சிவா என் பக்கத்தில் அழைக்க நான் அவன் பக்கம் போய்
உட்கார்ந்தேன்.. அப்பொழுதுதான் அவளை பார்த்தேன்.. என்னையே
பார்த்துக்கொண்டிருத்தாள். "புதுசா வர்றவனுக்கு இவ்வளவு மரியாதயா..? என
அவள் பார்வையில் தெரிந்தது. அப்பொழுதுதான் அந்த தெற்றுப்பல்லை
பார்த்தேன்.

ஒவ்வொரு தடவையும் மிஸ் அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது அவள்
பெயர் வரும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அவள் என்னைப்
பார்த்துக் கொண்டே ப்ரசண்ட் சொல்லுவாள். ஏனோ தெரியல அவள் மீது ஒரு ஈர்ப்பு தொற்றிக்கொண்டது. சிவா கூட பேசிட்டு இருக்கும் போது பக்கத்தில் வந்தாள், அன்று முதல் பேச ஆரம்பித்தோம். இருந்தாலும் சிவாட்ட பேசுற மாதிரி என்னிடம் பேச மாட்டாள். எனக்கு வருத்தமா இருக்கும். அவர்கள் இருவரும் அடித்துலாம் விளையாடுவார்கள். நான் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்... என்னால் வேற என்ன பண்ண முடியும்..!

தினமும் அவள் வீட்டுக்கு போகும் போது உமா, பூர்ணிமா கூடத்தான் போவாள். அவள் வீடு கோபால்சாமி கோவில் பின்னாடி.. என்னுடய வீடு தெற்குபஜார் சடகோபன் சந்து.. நான் தனியாதான் போவேன். சிவா வீடு ராமர்கோவில் தெருவில் இருந்தது. அதனால
எங்ககூட அவன் வர மாட்டான். நான் முன்னாடி நடந்து போயிட்டு இருக்கும் போது பின்னாடி இவர்கள் கிண்டல் பண்ணிக்கொண்டே வருவார்கள். எனக்கு அதில் விருப்பமதான் இருக்கும். ..சிவா இல்லாமல் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாத்தான் இருக்கும். எப்பொழுதும் விஷஷே பார்வையொடுதான் பேசுவாள்.
படபடவென பேசுவாள். அவள் என் மனதை முழுவதும் ஆக்கிரமித்தாள்..


சிவா பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.
" ஜமுனா வந்துட்டாப் போல.. இந்தா போய் பார்த்துட்டு வாரேன் " என்று
எந்திரித்து போய் விட்டான். நான் எழும்புவற்குள் அவள் இருக்கும்
இடத்திற்கு சென்று விட்டான். நான் என் இடத்திலே உட்கார்ந்து விட்டேன்.



அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அடிக்கடி என்னை திரும்பி பார்த்துக்கொள்வாள் " நானும் உன்ன பார்க்றேண்டா..கவலைப்படாதே " என்று சொல்வது போல் இருக்கும் அவள் பார்வை. அவன் பேசிட்டு இருக்கும்போதே நம்மள பார்க்கிறாளுன்னா கண்டிப்பா நம்ம மேல ஆசை இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.

தினமும் சாயங்காலம் வாடகை சைக்கிள் எடுத்திகிட்டு அவ வீட்டு முன்பு
ரவுண்டு அடிப்பேன். அவள் வீடு முன்னடி வந்தாள்னா கண்டிப்பா ஒரு சிரிப்பு சிரிப்பாள்..ஆனா ஒரு தடவை கூட வீட்டுக்குள் கூப்பிட்டதே இல்லை..அது எனக்கு எமாற்றமாய் இருக்கும்.. ஒரு நாள் சிவா வந்து ஜமுனா வீட்டுக்கு
போனதாகவும், அவள் அம்மா அவனிடம் நல்லா பேசினதாகவும் சொன்னான். எனக்கு அவன் மேல் பொறாமையாயிருந்தது. ஒருவேளை இவனும் ஜமுனாவை லவ் பண்ணுவாணோ என்று
சந்தேகப்பட்டேன்.. அதைப்பற்றி அவனிடம் கேட்கவேண்டும் என முடிவு பண்ணிணேன்.


ஒரு நாள் பொன்னையாபிள்ளை ஸ்டோர்ல எதோ மிஸ் வாங்கிட்டு வர சொன்னாங்கன்னு நானும் சிவாவும் வாங்கிட்டு தெற்குபஜார்ல வந்துகிட்டு இருந்தோம்.
நான் தான் வாய் திறந்தேன்

"சிவா, நான் ஒன்னு கேட்கலாமா...? "
" என்ன.. சொல்லு..!"
"ஜமுனாவ நீ லவ் பண்றியா..?" என்றேன். அவன் திருப்பி
" நீ பண்றியா..?" என்றான்.
"நீயே, முதல்ல சொல்லு.." என்றேன்.
"நீ சொல்லு, நான் சொல்றேன்" என்றான். கொஞ்சம் நேரம் யோசிச்சிகிட்டு
"ஆமா...!" என்று படக்கென்று உடைத்தேன்.
அவன் அதற்கப்புறம் ஒன்றும் பேசவில்லை விறுவிறுவென்று நடந்து ஸ்கூலுக்குள்
சென்று விட்டான்.
அதன்பின் அவன் என்னிடம் பேசவே இல்லை..எனக்கு சிவா பேசாமல் போனதுகவலையாயிருந்தது. இதற்குள் நாங்கள் இருவரும் பேசாமல் போனது ஜமுனாவுக்கு தெரிந்து விட்டது. என்னிடம் வந்து கேட்டாள். நான் மழுப்பினேன்.. அவள் எனக்கு எதுக்கு சண்டை போட்டிங்கன்னு தெரிந்தாகனும் என்றாள்.மேலும்

"நீங்க ரெண்டு பேரும் பேசுங்கப்பா.. ப்ளீஸ்..எனக்காக.. ப்ளீஸ்.." என்று
கெஞ்சினாள்.

பின்னர் அவளே சிவாவையும் கூட்டிட்டு வந்து இருவரையும்
சேர்த்து வைத்தாள். அதன்பின் நாங்கள் பேசினாலும் ஜமுனா விசயத்தில் சுய நலமாவே இருக்க ஆரம்பித்தோம்..



ஒரு நாள் மணி சொன்னான்
"ஜமுனா, சிவாவதான் லவ் பண்ணுவான்னு நினைக்கேன்.." என்றான்.

அன்று முதல் ஜமுனா, சிவாவை லவ் பண்ணுவது போலவும், என்னை வெறுப்பது போலவும் கனவு காண ஆரம்பித்தேன். அந்த சுயபச்சாபத்தில் இனிமை காண முயற்ச்சித்தேன். அவளுடய பிறந்த நாளன்று என் காதலை சொல்ல முடிவெடுத்தேன்.


கிப்ட் வாங்குவதற்கு அம்மா பணம் வைத்திருக்கு அரிசி டப்பாவில் இருந்து 25 ரூபாய் எடுத்து சரஸ்வதி ஸ்டோரில் அழகான கிப்டை வாங்கினேன்.

கிப்டை ஸ்கூல்பேக்கில் வைத்திருந்தேன்.
அம்மா அரிசி டப்பாவை திறந்து பார்த்தாள். பணத்தை காணவில்லை என தெரிந்து

"வீட்டு வாடகைக் குடுக்க வைந்திருந்தேன்.. யார் எடுத்தான்னு தெரியலயே.."
என்றாள் கவலையோடு


நான் " அப்பா எடுத்தாலும், எடுத்திருப்பாரு..!" என்று பொய் சொன்னேன்.


உடனே அம்மா ஆவேசப்பட்டாள். அப்பா வேலைக்கு போயிட்டு வந்ததும் சண்டை போட ஆரம்பித்தாள். அப்பா தான் எடுக்கவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அம்மா
விடவில்லை. அது பெரிய சண்டையை உண்டு பண்ணிருமோன்னு பயமா இருந்தது...அம்மாட்ட உண்மையை சொல்லவும் பயமா இருந்தது. சொன்னா அந்த கோபம் என் மேல
திரும்பும். மேலும் கிப்ட் கொடுக்காம ஜமுனாட்ட லவ் சொல்ல முடியாது...
நான் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தேன். அம்மாவும் அப்பாவும் சண்டை
போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா தீடீரென்று அம்மா செவிட்டில் அடித்து
விட்டார். அம்மா அப்படியே சுவர் ஒரமாய் சாய்ந்து விட்டாள்.


" இருடி, தண்ணீய போட்டு வந்து உன்ன வச்சிகிறேன்.."என்று அப்பா வெளிய
போய்விட்டார். அம்மா கவலையோடு உட்கார்ந்திருந்தாள். நான் கிப்ட்ட
தூக்கிக்கொண்டு சிவா வீட்டுக்கு போனேன்.


அவன் " என்னடா.. " என்று வெளிய வந்தான்.
கவரிலிருந்து கிப்ட்ட வெளிய எடுத்து
" இத வாங்கிக்கொடா.. வீட்ல பிரச்சினைடா.. இருபது ரூபாய் மட்டும் கொடுடா.." என்றேன்.




அவன் கிப்ட்ட எடுத்து பார்த்தான். அவனுக்கு பிடித்திருந்தது.
வீட்டுக்குள் சென்று இருபது ரூபாய் எடுத்துட்டு வந்து கொடுத்து, கிப்ட்ட வாங்கிக்கொண்டான்.


ஒரு பொட்டி கடைக்கு சென்று ஒரு மொய் கவரை வாங்கி அதில் இந்த இருபது ரூபாயை வைத்து என் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.
வீட்டுக்கு சென்றேன். அப்பா வரவில்லை. அம்மா அழுதுக்கொண்டுதான்
இருந்தாள். அம்மாவிடம் சென்று பாக்கெட்டில் இருந்து மொய் கவரை எடுத்து
" அம்மா இங்க பாருமா.. இது அந்த பாலாஜி கல்யாண மண்டபம் கிட்ட கடந்ததுமா.. சிவா வீட்டுக்கு போயிட்டு வரும்போது கிடந்ததுமா.. எடுத்துப்பார்த்தா.. இருபது ரூபாய்.. அதான் கொண்டு வந்துட்டேன்...இங்க பாரு .." என்று
அம்மாவிடம் கொடுத்தேன்.

அம்மா வாங்கி பார்த்தாள்... சிரித்தாள்... கடவுளா
பார்த்து கொடுத்ததாக சொன்னாள்...

கொஞ்சம் நேரம் கழித்து அப்பா வந்தார்.
தண்ணீ அடித்திருக்கவில்லை. அம்மா சாப்பாடு எடுத்து வைக்கும் போது
அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். அப்பாவும் திருப்பி
கேட்டுக்கொண்டார். இருவரும் நெருக்கமாயினர்.

எனக்கு சந்தோசமார்யிருந்தது.

அடுத்த நாள் ஜமுனா பிறந்த நாள். நான் லேட்டாதான் ஸ்கூலுக்கு போனேன்.
காதல் சொல்லும் முயற்ச்சியை கைவிட்டேன்.
அவளிடம் போய் வாழ்த்து சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டே என் கையில் ஒரு பொட்டலத்தை திணித்தாள். அதை அப்படியே கொண்டு போய் என் பேக்கில் வைத்துக்கொண்டேன். சிவாவையும், ஜமுனாவையும் பார்த்தேன். இருவரும்
சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். அவள் கையில் நான் வாங்கிய கிப்ட் இருந்தது..எனக்கு அழுகையாய் வந்தது. அவள் கொடுத்த பொட்டலத்தை பிரித்து பார்த்தேன். அதில் 5ஸ்டார் சாக்லேட், கேர்பரிஸ்
சக்லேட் எல்லாம் இருந்தது. எனக்கு மட்டும் இப்படி கொடுத்துருக்கான்னா எதோ விசயம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருவேளை நம்மல லவ் பண்ணுவாளோ என்று நினைத்தேன்.

அப்படி நினைக்கும் போது சந்தோசத்தின் உச்சத்திற்கு சென்றேன்...


ஸ்கூல் விட்டு மணி கூட வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தேன்.


மணி கேட்டான்
" ஜமுனா உனக்கு சாக்லேட் கொடுத்தாளா...!" என்றான்.
"ஆமாம்.. குடுத்தா.." என்றான்.
" எத்தனை.. "
"நிறைய.." என்று பொட்டலத்தை எடுத்துக் காட்டினேன்.


"சிவாவுக்கு என்ன கொடுத்தா.. தெரியுமா..?


" என்ன.. " என்றேன் ஆச்சரியத்துடன்


"ஒரு சாக்லேட்.. அதுவும் ஆசை சாக்லேட்.." என்றான்.

எனக்கு குதுகலமாய் இருந்தது..



" உண்மையாவா... ஒரு சாக்லேட்டா...!"



" ஆமா.. ஆனா பாதி கடிச்சிக்கிட்டு குடுத்திருக்கா...!!" என்றான்..





இப்பொழுது எனக்கு ஜமுனா, மொட்டைகிறிக்கியாய் மாறியிருந்தாள்...


ஒவியம்-- இளையராஜா

கபிலன் சிலை-- சிறுகதை

2011-08-25

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்







வீட்டு முன்னால் ஓலைப்பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தலின் நடுவே வெள்ளைத்துணி கட்டியிருந்தார்கள். வீடு முழுவதும் மரண ஒலம் கேட்டுக்கொண்டிருந்த்து. " ஏய், ஐயா, என்ன பெத்த ராசா...!! என்ன விட்டுட்டு போயிட்டியே... அய்யோ... கபிலா.. இப்படி எங்கல தனியா விட்டுட்டு போயிட்டியே..." என்று வாயில் எச்சில் ஒழுக அழுதுக்கொண்டிருந்த்னர். மரண செய்தி கேட்டு சொந்தகாரர்கள், தெரிந்தவரகள் வர ஆரம்பித்தனர். வீட்டுக்கு முன்பு சைக்கிளும், டூவீலரும் குவிந்து இருந்தது. பந்தல் அருகே உள்ள ஒரு கல்லில் உட்கார்ந்திருந்தான் சிவா. அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்திருந்தது. காலையில் விசயத்தைக் கேட்டதிலிருந்து அழுதுக்ககொண்டேதான் இருந்தான். போஸ்ட் மார்ட்டம் முடிந்து பாடி வந்ததும் பெணகளுடன் சேர்ந்து பிணத்தை கட்டிப்பிடித்து அழுதான். மற்ற ஆம்பளைகளெல்லாம் விலகி நிற்க இவன் மட்டும் நெஞ்சில் அடித்து அடித்து அழுதான்.யாரும் அவனை த்டுக்க முடியல. கொஞ்சம் நேரம் கழித்து நன்பர்களெல்லாம் வந்து அவனை இழுத்துட்டு போய் வெளியே உட்கார வைத்தனர். பேச்சு வரவில்லை, வாய் கோணியது.

" டேய் மணி, நம்ம கபிலன் நம்மள விட்டுட்டு போயிட்டாண்டா...அய்யோ..கடவுளே.." என்று உளறிக்கொண்டிருந்தான். வந்தவர்கள் அனைவரும் இவனை வினோதமாக பார்த்தனர். நண்பர்களால் இவனை தேற்ற முடியவில்லை. தேம்பி தேம்பி அழுதான். உருண்டு பிரண்டு அழுததில் சாரமெல்லாம் அழுக்காயிருந்தது.

"தண்ணியாவது குடிடா..?" என்று கெஞ்சிக் கேட்டான் மணி. எந்த பதிலும் சொல்லாமல் நிலைக்குத்திப் போய் உட்கார்ந்திருந்தான். அவனாகவே வாய் திறந்தான்.

"நாந்தாண்டா.. கபிலன கொன்னென்.. பேசாம நான் ட்ரெயின்ல போறேன்னு சொன்னான்.. நாந்தான் பஸ்ல போன்னு டிராவல்ஸ்ல ஏத்திவிட்டேன்..."என்று அழுது கொட்டினான்.



ஜமுனா தன் தம்பியோடு வந்தாள். அவளைப் பார்த்தும் தன் இரு கையால் கண்ணைத்துடைத்துக் கொண்டான். அவளை அழைத்துட்டு போய் கபிலனின் உயிரற்ற உடலைக் காட்டினான்..அவள் அவளை அறியாமல் அழ ஆரம்பித்தாள். அப்படியே உட்கார்ந்து விட்டாள். கபிலனின் மேல் மாலைகள் குவிக்கப்பட்டிருந்தது..!



சிவா வீட்டுக்குள் சென்று அங்கிருந்த தன் அம்மாவிடம் எல்லாருக்கும் காபி கொடுக்க சொன்னான். தீடிரென்று ஆளே மாறி விட்டான். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்தான். நண்பர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.மதியம் மூன்று மணிக்கு மேல் கபிலனின் பாடியை தூக்குவதாக முடிவு பண்ணினர்.

மையான வண்டி வந்தது. கபிலன் அதில் எற்றப்பட்டான். சங்கு ஊதப்பட்டது. ஆம்பளைகள் வண்டியின் பின்னால் சென்றனர். பெண்கள் பெரும் கூச்சலிட்டு அழுதார்கள்.



ஜமுனாவும் ஆழுதாள். சிவா அம்மாவும், கபிலன் அம்மாவும் ஜமுனாவை வினோதமாக பார்த்தனர்." யார், இந்த பெண்ணென்று..?"..

வண்டிக்கு பின்னால் கபிலனின் முகத்தைப் பார்த்தவாறு வந்துக் கொண்டிருந்தான் சிவா. தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை தாண்டும் போது மயக்கம் வந்தது. கபிலனின் நினைவலைகள் சிவா மனதில் எழும்ப ஆரம்பித்தன.. அஸ்போர்ன்ஸ் ஸ்கூலப் பார்த்தான். கபிலனும் சிவாவும் அங்கதான் படித்தார்கள். அங்கு எட்டு வரைக்கும்தான். அதன்பின் ஜான்ஸ்ல படித்தார்கள். இஞ்ஜினியரிங்க் போறதுக்கு வாய்ப்பு கிடைத்தும் நான் சிவா கூடத்தான் படிபேன் என்று சேவியர்ஸ் காலேஜ்ல சிவா கூட சேர்ந்தான் கபிலன். சின்ன வயசிலேருந்து ஒன்னாதான் சுற்றுவாரகள். அவர்களுக்குள்ளே கருத்துவேறுபாடு வந்ததே கிடையாது.

என்ன கொஞ்சம் சிவா தைரியசாலி, கபிலன் கொஞ்சம் அமைதி டைப். வாரத்திற்கு ஒருமுறை கபிலனை படத்திற்கு கூட்டிட்டு போயிருவான் சிவா. பாம்பே தியேட்டர், பேரின்பவிலாஸ் தியேட்டர் என திருநெல்வேலி தியேட்டர் முழுவதும் சுற்றுவார்கள்.

எங்க போனாலும் சைக்களில்தான் போவார்கள். சிவாதான் அழுத்துவான். கபிலன் பார்கம்பில உட்கார்ந்திருப்பான்...

நைட் வ.வு.சி கிரவுண்ட்ல உட்கார்ந்திட்டு கதை பேசிக்கொண்டிருப்பார்கள். காலேஜ் படிப்பு முடிந்ததும் வேலை தேட ஆரம்பித்தர்கள்.

கபிலன் கவர்ன்மெண்ட் எக்ஸாம் கோச்சிங்க் போறேன்னுட்டு சாப்டர் ஸ்கூல் பக்கத்தில் உள்ள செண்டருக்கு போயிருவான். கபிலன் வர்ற வரைக்கும் மார்க்கெட்ல உள்ள் மணி கடையில் உட்கார்ந்திருப்பான் சிவா.. மணி இரண்டானதும் நேராக வாய்க்கால் பாலம் பஸ் ஸ்டாப்புக்கு போய் கபிலனை கூட்டிட்டு வருவான். வ.வு.சி கிரவுண்ட்ல உட்கார்ந்திருக்கும் போது சிவா சொன்னான்..

" கபிலா, ஜமுனாவ பார்த்தேன்டா.."

" எங்க வச்சுடா.. எப்ப பார்த்த..." என்று ஆர்வமாய் கேட்டான் கபிலன்.

"பாளை பஸ்டாண்ட்லதான்.. தோள்ல பேக்க மாட்டிகிட்டு சூப்பரா போனாடா.. ஆனா பேச முடியல..?

"சூப்பரா இருந்தா நமக்கென்னடா.. பேச்ச மாத்ரியா.. ப்ளீஸ்..."என்று சலிப்புடன் கூறினான்.

" யேய்.. சும்மா கத வுடாத.. அவள ஒரு தடவ கூட நினைக்க மாட்ட.. பெரிய இவன் கனக்கா பேசுற...உனக்கு அவள பார்ததா பயம்... அதான்.. அதுக்கு அவா என்ன பண்னுவா..நல்ல பொண்ணுடா.. நீதான் மிஸ் பண்ணிட்ட..காலேஜ் படிக்கும் போதே நீ சொல்லிருக்கனும்.. நான் போய் சொல்றேன்னாலும் நீ வேனான்னு சொல்லிட்ட..”

கபிலன் பதில் எதும் சொல்லவில்லை. எதிர்த்தாப்புல உள்ள கேலரிய பார்த்துட்டு இருந்தான். ஈகிள் புக் செண்டர் மேல ஜீஸஸ் சேவ்ஸ் அஸ் என்று லைட் எரிந்தது...

" என்னடா..ஒன்னும் சொல்ல மாட்டுக்க.. இப்ப ஒன்னும் கெட்டுப் போகல.. அவ இங்கதான் எங்கயாவது வேலை பார்ப்பா.. நாளைக்கு பாளைபஸ்டாண்டுக்கு போவோம்.. பார்த்து பேசுவொம்.. என்ன ஒகேவா..." என்றான் சிவா.

கபிலன் சிரித்தான். தொலைந்து போன காதலை மறுபடியும் தேட ஆரம்பித்தான்.


ஜமுனாவை நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது. காலேஜ் படிக்கும் போதே கைக்கூடும் நிலையில்தான் கபிலன், ஜமுனா காதல் இருந்தது. ஆனால் காதலை வெளிப்படுத்தாமலே இருவருமே பிரிந்தனர். மறுபடியும் ஜமுனாவைத் தேடி கபிலன் போக விரும்பவில்லை. தேடிப்போய் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தால் தன்னால் தாங்க முடியாது என்று நினைத்து அவளது எண்ணத்தை மறக்க முயர்ச்சித்தான்..இப்பொழுது நாளை பார்க்கப்போகிற சந்தோசத்தில் தூங்கிப்போனான். .



காலையில் பாளைபஸ்டாண்டு ஹோட்டல் சரவனாஸ் அருகே நின்றுக்கொண்டிருந்தனர். அவள் வேனி பஸ்ல வந்து இறங்கினாள்.

சிக்னலை கிராஸ் பண்ணி நடக்க ஆரம்பித்தாள். ஜமுனா முன்ன விட இப்போது ரொம்ப அழகாயிருப்பதாக கபிலனுக்கு தோன்றியது.

" வாடா.." என்று இழுத்துட்டுப் போனான் சிவா. ஜமுனா முன்னால் போனாள். தீடீரென்று ஸ்டேட் பேங்குள் நுழைந்தாள்.

இவர்களுக்கு திகைப்பாயிருந்தது. இவர்கள் உள்ளே போய் அவளைத் தேடினார்கள். ஜமுனா கபிலனை பார்த்துவிட்டாள். அழகிய சிரிப்புடன் அருகில் வந்தாள்.

" கபிலா, எப்படி இருக்கிங்க..!!" என்றாள் கண்ணில் ஆர்வம் பொங்க.

"ம்ம்ம்.. நல்லா இருக்கேன்...உங்கள பார்க்கதான் வந்தேன்.. ஆனால் நீங்க இங்க வேலை பார்க்கிறீங்கன்னு எனக்கு தெரியாது.."

"என்ன பார்க்கவா..?" கண் விழி உயர்ந்தது. அருகில் இருந்த சிவா "வாங்களேன் வெளிய போய் பேசிட்டு வரலாம்.." என்றான்.

"வரேன்.." என்று கூறிவிட்டு உள்ளே போய் யர்ரிடமோ சொல்லிவிட்டு வெளிய வந்தாள்.

மூவரும் அரசனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். சிவா முன்னாடி போனான். பின்னாடி ஜமுனாவும் கபிலனும் சிரித்து சிரித்து

பேசிட்டு வந்தனர். கபிலனுக்கு கூச்சம் எல்லம் போயிருந்தது..

அரசனில் ஜீஸ் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்தனர். கபிலன்தான் ஆரம்பித்தான்.

" உங்கள மறுபடியும் பார்ப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை.. ரொம்ப சந்தோசமா இருக்குது " என்றான்.. சிவா நைசா நழுவ பார்த்தான்." நீ பேசிட்டு இருடா..வெளிய மணி போற மாதிரி இருக்குது.. பார்த்துட்டு வந்துருதேன்.."என்று கிள்ம்பினான்.

கபிலனும், ஜமுனாவும் சிரித்துக் கொண்டார்கள். கணகளால் பேசிக்கொண்டார்கள். சிவா உள்ளே வரும் போது கபிலன் பேசிக் கொண்டிருந்தான்

" எப்படிங்க.. இண்டர்வியு ரொம்ப கஷ்டமா இருக்குமா.. ?"

சிவா தன் தலையில் அடித்து கொண்டான்.


"ஹலோ, என்னங்க பேசிக்கிட்டிருக்கிங்க.. ஜமுனா இங்க பாருங்க..நான் ஒபனாவே கேட்குறேன்.. காலேஜ்ல இருந்தே உங்க மேல உசிர வச்சிருக்கான் கபிலன்.. நீங்க என்ன சொல்றீங்க.." என்று போட்டு உடைத்தான். அவன் அப்படி கேட்டது. அவள் முகத்தில் வெட்கத்தை உண்டு பண்ணியது. இருவரையும் பார்த்தான் சிவா.


"பதிலை யாருட்ட சொல்லனும்.. உங்ககிட்டயா.. இல்ல உங்க நணபர்கிட்டயா.." என்றாள் ஜமுனா.

"இந்த உத்தமபுத்திரண்டதான்" என்று கபிலன் தலையை தன் கையால் திருப்பி காட்டினான் சிவா. அவள் சிரிச்சிகிட்டு

"பிடிச்சிருக்கு... போதுமா.."என்றாள். கபிலன் சந்தோசத்தின் உச்ச்த்திற்கு சென்றான். அன்றிலிருந்து கபிலன் தினமும் ஜமுனாவை பார்க்க செல்ல ஆரம்பித்தான். அவர்கள் காதல் ஆரோக்கியமாக வளர்ந்தது..இதற்கெல்லாம் சிவாதான் காரணம் என்று நினைத்துக் கொள்வான் கபிலன்.



ஜங்ஸனில் நல்ல கூட்டம். சென்னைல பேங்க் எக்ஸாம் இருந்தது. அத்ற்கு கபிலனை வழியனுப்ப வந்திருந்தான் சிவா. கூட்டத்தை பார்ததும் " பஸ்ல போடா.." என்று வர மறுத்த கபிலனை வலுகட்டாயமா இழுத்துட்டு வந்து பஸ்ல எற்றிவிட்டான்.

" நல்லா எக்ஸாம் எழுதுடா.. அப்புறம் ஜமுனாவும் பேங்கு, நீயும் பேங்கு.. கலக்கலாம்.." கபிலன் சிரித்துக்கொண்டே கை ஆட்டினான். அதுதான் அவன் கடைசி சிரிப்பா இருந்தது.



வெள்ளக்கோவில்ல கபிலனை எரித்தார்கள். தாமிரபரணியில் தலை மூழ்கி வீடு வந்து சேர்ந்தார்கள். அதனை தொடர்ந்து மூன்றாவது நாள் விசஷேம், பதினாறாவது நாள் விசஷேம் என முன்னின்று நடத்தி வைத்தான். எப்பொழுதும் சோகமாக திரிய ஆரம்பித்தான். உடல் மெலிய ஆரம்பித்தான். தாடி வளர்த்தான்.சிவா அம்மா எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். இவன் அசையவில்லை. கபிலன் கூட எங்கெல்லாம் சுற்றினானோ அங்கெல்லாம் போய் உட்கார ஆரம்பிததான். நம்மாலதான் கபிலன் இறந்தான் என்று நினைக்கும் பொதெல்லாம் இந்த உலகத்தை வெறுக்க ஆரம்பித்தான். இரண்டு தடவை தற்கொலை செய்ய முற்பட்டு தோற்றுப்போனான்...

தீடீரென்று கபிலன் தான் கனவில் வந்து தான் சாதிக்க நினைத்ததை நீயாவது செய்யுடா என்று சொன்னதாகவும் , அடுத்த நாள் முதல் சிவாவும் கிளாஸ் போக ஆரம்பித்தான். சிவா வீட்ல ரொம்ப சந்தோசப்பட்டார்கள். பையன் திருந்திவிட்டான் என்று.. அடிக்கடி ஜமுனாவை போய் பார்ப்பான். அவள்க்கு இவன் ஆறுதல் கூறுவான். இவனுக்கு அவள் ஆறுதல் கூறுவாள்.

குருப் 2 ரிசலட் வந்தது. இண்டர்வியூ போறதுக்கு முதன்முறையா தாடியை எடுத்தான். பளிச்சென்று இருந்தான். கபிலனின் இரண்டாவது நினைவு தினம் வந்தது. நண்பர்கள் அனைவரும் பெரிய அளவில் பண்ண பிளான் பண்ணினார்கள்.

மணிதான் சொன்னான் " பேப்பர்ல பெரிய விளம்ப்ரம் கொடுப்போம். தெற்கு பஜார் முழுவதும் பேனர் வைப்போம்.. " என்றான்.





சிவா யோசிச்சிக்கொண்டே உட்கார்ந்திருந்தான். அடுத்த நாள் குருப் 2 இண்டர்வியூ ரிசல்ட் வந்தது. இண்டர்வியூவில் பெயில் ஆயிருந்தான். அதை பற்றி அவன் கவலைப்படவில்லை..





சைக்கிளை எடுத்துட்டு சமாதானபுரம் ரோட்ல போனான். சிலை செய்யிற கடைக்கு போனான். அங்கே எம்.ஜி.ஆரும், காந்தியும், அண்ணாவும் நின்றுக் கொண்டிருந்தனர்.. ஒனரைப் பார்த்தான்.

" ஐயா, ஒரு சிலை செய்யனும்.."

"யார் சிலைப்பா.." என்றார் பெரியவர்.

தன் பாக்கெட்டில் இருந்து கபிலன் போட்டாவை எடுத்துக் கொடுத்தான். பெரியவர் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்தார். தன் நண்பனைப் பற்றி சொன்னான்.

பெரியவர் ஆதங்கப்பட்டார் " கண்டிப்பா நல்ல பண்ணிரலாம் தம்பி " என்று சிவாவை அனுப்பி வைத்தார்..





தன் வீட்டு முன்னால் உள்ள இடத்தை சுத்தம் செய்தான். சிலையை கொண்டு வந்து இற்க்கினார்கள். சிலையை நிறுத்தினர். அவன் நினைவு நாளன்று கிளரிந்தா சர்ச், நூற்றாண்டு மண்டபம் அங்குள்ள பிச்சைககாரர்கள், எழை எளியவர்களை அழைத்துட்டு வந்து சாப்பாடு போட்டான். கபிலன் அப்பாதான் சிலையைத் திறந்த்தார். ஜமுனாவும் வந்திருந்தாள்.

நண்பர்களும், ஜமுனாவும், சிவாவும் கபிலன் சிலையை கண் கலங்க பார்த்துக்கொண்டிருந்தனர்.



என்னுயிராய் இருந்தாய்....!



         என்னை விட்டு சென்றாய்....!



                  என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய்....!



                            நண்பனே...!



என்று சிலையின் அடியில் பொரிக்கப்பட்டிருந்தது...

கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தான் கபிலன்.....!!