தென்மேற்கு பருவக்காற்று -- கள்ளிக்காட்டின் தென்றல் காற்று..

2011-01-26

| | | 0 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
தமிழ் சினிமா எத்தனையோ கிராம படங்களை தந்தாலும் ஒரு சில படங்களே மனதிலும், வரலாறிலும் இடம் பிடிக்கிறது. இப்ப நெறைய யதார்த்த படம் வர ஆரம்பிச்சிட்டு, இதுவும் நல்லதுக்குத்தான்.

திருவிழா பாடல்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மேலும் கஞ்சா கருப்பு இல்லாத கிராம கள்ளிக்காட்டின் வாசத்தை சொல்கிறது இந்த தென்மேற்கு பருவக்காற்று.


 



டைட்டில்ல வருகிற கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடலில் வருகிற ஒவ்வொரு வரியும், பெண்ணும் மனதில் அழுத்தமாக பதிகிறார்கள். பூ படத்திற்கு அப்புறம் இயல்பான கிராம படத்தில் நான் பார்த்து வியந்தது இந்த படத்திற்குதான்..
தாய் பாசம் சம்பத்தப்பட்ட படம்னு நாம் ஒரு வரையறுக்குள் ஒதுக்கப்பட முடியாது, ஏனெனில் இதில் தாயில் அன்பு மட்டுமல்ல  அதையும் தாண்டி அவள் வீரமும், உழைப்பும், ஒரு நாட்டுபுற தாயின் அச்சு அசல் வாழ்க்கையும் பதிவு செய்யப்பட்டிருக்கு..

ஆடு மேய்க்கும் கதாநாயகன், ஆடு களவாண்டு அதை கறியாக்கும் குடும்பத்தில் கதாநாயகி, பொட்டல்  பூமி என  ரொம்ப எதார்த்தமான கதை..

படத்தில் அத்தனை பேரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.. குறிப்பாக சரண்யா , இந்த படத்தில் அம்மாவாக  வாழ்ந்திருக்கிறார்கள். கதாநாயகனின் மாமா பொண்ணு, அவனது நண்பர் கணேஷ் என படம் முழுக்க நிஜ நாயகர்கள்.

கதாநாயகன் சேது அழகாக இருக்கிறார், அழகாக நடித்திருக்கிறார். காதல் பொங்க கண்களால் பார்ப்பதும் சரி,  எதிராளியுடன்  சண்டை போடுவதும்  சரி அழகா செய்திருக்கிறார்.
கதாநாயகி வசுந்தரா தாவணியில் அழகாக  இருக்கிறார், பட்டிகாட்டு பொண்ணை போல அமைதியாக நடித்திருக்கிறார்.

கள்ளி காட்டில் பிறந்த தாயே என்ற ஆரம்பித்த படம், அதே பாடலுடன் முடிகிறது ,
சிறப்பான முடிவு.

ஒரு சிறுகதை படித்த அனுபவத்தை கொடுத்தது, குறிப்பாக அந்த பாடலை தொடர்ந்து நான்கு தடவை கேட்டேன், அவ்வளவு அழகான வரிகள், கள்ளிக்காட்டு இதிகாசம் படைத்த வைரமுத்து இவ்வரிகளையும் படைத்துள்ளார்.

செழியனின் ஒளிப்பதிவு செம்மண் நிலங்களையும், ஆடு மந்தைகளையும் அழகான மனிதர்களையும் சிறப்பாக வர்ணம் தீட்டியுள்ளார்.

சீனு ராமசாமி பெரிய இயக்குனராக  வருவார், சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர் பார்க்கலாம்..

கண்டிப்பாக இதுவும் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று அதில் மாற்றமில்லை..



புத்தக கண்காட்சியில் நான்..

2011-01-15

| | | 3 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்
சென்னை புத்தக கண்காட்சி எனக்கு புதுசு, திருநெல்வேலியில் இருக்கும் போது சென்னை என்பது வெகு தூரம் மட்டுமல்லாமல் வெறும் புத்தக கண்காட்சிக்கா சென்னை போறன்னு கேள்வி வேற...? எனவே அது முடியாத காரியமாக இருந்தது.. இப்போது விருத்தாசலம் பக்கத்துல இருக்கிறதுனால இந்த தடவ பார்த்ருவோம்னு நண்பர் சுப்பையாவுடன் கெளம்பியாச்சு.. சுப்பையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பேராவுரனியில் பணிபுரிகிறார்.. இருவரும் சென்னை வந்து இறங்கினோம்..


நிறைய புத்தகங்கள் கோவை மற்றும் நெய்வேலி யில் வாங்கியாச்சு எனவே குறிப்பிட்ட புக்ஸ் வாங்கலாம்னு முடிவு பண்ணி முதல்ல உயிர்மை பதிப்பகம் போனோம்.. செம கூட்டம், எல்லாம் இளைஞர்கள் , நானும் இளைஞன்தான் ( கலைஞரின் இளைஞன் அல்ல பா ).

அங்கு வா.மு.கோமுவின் சாந்தாமனியும் இன்ன பிற காதல் கதையும் வாங்கினேன், மேலும் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் நண்பருக்காக வாங்கினேன். அங்கு மனுஷ்யபுத்திரனை சந்தித்தோம்.

மேலும் தமிழினி வெளியிடான நெடுஞ்சாலை, ஜெயமோகனின் இரவு, வண்ணதாசனின் சின்னு முதல் சின்னு வரை, மேலும் சில சிறுகதை தொகுப்புகள் வாங்கினோம்.

ராமகிருஷ்ணன் காற்றில் யாரோ நடக்கிறார்கள் என்கிற தொகுப்பில் சிப்பியின் வயிற்றில் முத்து என்கிற நாவலை அறிமுகபடித்திருப்பார், அந்த நாவலை நேஷனல் புக் டிரசட்ல் வாங்கினேன்.

இந்த புத்தக கண்காட்சி இனிமையாக அமைந்தது....