இந்தியாவில் வெளியான சில சமூகம் சார்ந்த படங்களில் மாத்ருபூமி மிகவும் முக்கியமானது.
மாத்ருபூமி கதை பெண் சிசுக்கொலை பற்றியது..
நம்ம ஊரு பாரதிராஜா எடுத்த கருத்தம்மா மாதிரி இதில் கமர்சியல் அயிட்டங்களோ, மசாலா திரைக்கதையோ, தனியே வரும் பாடல்களோ கிடையாது...
கருத்தம்மா தமிழில் சிறந்த படம் தான் இருந்தாலும் மாத்ருபூமி சில தனித்தன்மை வாய்ந்தது.
திருநெல்வேலி மனன்மோனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வருடம் தோறும் " கரிசல் திரைவிழா " என்ற விழா மீடியா படிக்கும் மாணவர்களால் நடத்தப்படும், இந்த விழாவில்தான் இந்த படைப்பை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
உலகத்தில் பெண்கள் இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இப்படத்தின் கதை..!
இப்படத்தில் வரும் கிராமத்தில் பெண்களே இல்லை, அந்த ஊரில் இருக்கும் ஊர் தலைவருக்கு ஐந்து பசங்க, இந்த பசங்களுக்கு பொண்ணு தேடி எல்லா ஊருக்கும் அலைகிறார்கள்.
கடைசியாக ஒரு பெண் கிடைக்கிறாள், அந்த பெண்ணை இந்த ஐந்து பையன்களும் மற்றும் பசங்களுடைய அப்பாவும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு நாள் வீதம் என அந்த பெண்ணுடன் குடித்தனம் நடத்துகிறார்கள்.
அந்த பெண்ணுக்கும் கடைசி சகோதரனிடம் மட்டும் அன்பு அதிகம் காட்டுகிறாள், இந்த இருவர் மட்டும் உண்மையாக அன்பு செய்கிறார்கள். இந்த விஷயம் மற்ற சகோதரர்கள் நான்கு பேருக்கு தெரிந்து அவனை கொலை செய்கிறார்கள்.
கடைசியில் இவர்களுக்குள்ளே அடி புடி சண்டை வந்து ஒருவருக்கொருவர் சாவுகிறார்கள்.
அந்த பெண் வேலைக்கார சிறுவனுடன் ஊரை விட்டு செல்வதாக படம் நிறைவடைகிறது...
உண்மையில் பெண் இல்லையென்றால் என்னவாகும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை, இன்றளவு பெண் சிசு கொலை என்பது குறைந்தாலும் பெண்கள் இல்லாத சமுதாயம் இருக்கவே முடியாது.
இந்த திரையிடல் விழாவில் நானும் கலந்து கொண்டு இப்படத்திற்கு விமர்சனம் எழுதி பரிசு பெற்றுகொண்டேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இதை விட கொஞ்சம் கருத்தொடுதான் எழுதினேன்.
இப்படம் பார்த்த பின்பு தான் மற்று திரைப்படம் குறித்த பல விசயங்களை கற்று கொண்டேன், அப்படி தேடி தேடி பார்த்த படங்கள் விரைவில் பதிவில் குறிப்புடுவேன்.
----- ஜெபா

